தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  G20 Summit : ‘நான் இந்து என்பதில் பெருமை கொள்கிறேன்’ – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!

G20 Summit : ‘நான் இந்து என்பதில் பெருமை கொள்கிறேன்’ – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!

Priyadarshini R HT Tamil
Sep 10, 2023 11:13 AM IST

G20 Summit : இன்று காலை அக்ஷர்தம் கோயிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி இருவரும் வழிபட்டனர்.

டெல்லி அக்ஷர்தம் கோயிலில் வழிபாடு நடத்தில் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்
டெல்லி அக்ஷர்தம் கோயிலில் வழிபாடு நடத்தில் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்று காலை அக்ஷர்தம் கோயிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி இருவரும் வழிபட்டனர்.

இந்த பிரார்த்தனைக்குப் பின்னர் சுனக் அக்ஷர்தம் கோயிலில் இருந்து ராஜ்காட்டில் உலகத்தலைவர்களுடன் சேர்ந்து மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பிரிட்டிஷ் பிரதமர் வருகையையொட்டி, கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நேற்று, ஏஎன்ஐயிடம் பேசிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இன்று டெல்லியின் அக்ஷர்தம் கோயிலுக்கு செல்வேன் என்று தெரிவித்திருந்தார். ஜி20 மாநாட்டுக்கு வரும்போது, அவர் கோயிலுக்கு வருவேன் என்று தெரிவித்திருந்தார். அவருக்கு பிரதமர் மோடி மீது அதிக மரியாதை உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இதனால், ஜி20 மாநாடு மாபெரும் வெற்றியடைய பிரதமர் மோடிக்கு உதவுவதாக தெரிவித்தார்.

‘நான் இந்துவாக இருக்க பெருமைகொள்கிறேன். நான் அவ்வாறுதான் வளர்ந்தேன். நான் அப்படித்தான் இருக்கிறேன். நான் இங்கு இருக்கும் அடுத்த இரண்டு நாட்களில் கோயிலுக்கு செல்வேன். நாங்கள் இப்போதுதான் ரக்ஷாபந்தன் கொண்டாடினோம். என சகோதரி மற்றும் உறவினர் சகோதரிகளிடம் இருந்து ராக்கிகளை பெற்றுக்கொண்டேன்’ என்று சுனக் தெரிவித்தார்.

எனக்கு ஜென்மாஷ்டமியை கொண்டாட நேரமில்லை. அதற்காக நான் கோயிலுக்கு சென்றுவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.

எதிலாவது நம்பிக்கையுடன் இருப்பது முக்கியம், அது மன அழுத்தத்தில் இருக்கும்போது நம்பிக்கை கொடுக்கிறது என்று அவர் மேலும் தெரிவ்த்தார்.

அக்ஷர்தன் கோயில் நிர்வாகமும், பிரிட்டன் பிரதமர் ரிணி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷா மூர்த்தி வருகையையொட்டி, விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவித்தது.

சுனக் தனது மனைவி அக்ஷாதவுடன் வெள்ளிக்கிழமையன்று வந்தார். ரிஷி சுனக் கடந்தாண்டு அக்டோபர் மாதம் பிரதமரானவுடன் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை.

பிரிட்டன்க்கும், இந்தியாவுக்கும் பலமான வரலாறு மற்றும் கலாச்சார தொடர்பு உள்ளது. இந்தியாவும், பிரிட்டனும் பல்வேறு உறவுகளில் உள்ளது. இது மேலும் எதிர்காலங்களில் வலுப்பெறும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்