தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tamil New Year Special : தமிழ் புத்தாண்டை வரவேற்கும் உணவுகள்! சுவையான மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

Tamil New Year Special : தமிழ் புத்தாண்டை வரவேற்கும் உணவுகள்! சுவையான மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Apr 07, 2024 11:13 AM IST

Tamil New year Special Recipe : ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை பொதுவாக நாம் மாங்காய் பச்சடி செய்து வரவேற்போம். இந்த நாளில் வேப்பம்பூ ரசமும் சிறப்பு வாய்ந்ததுதான்.

Tamil New Year Special : தமிழ் புத்தாண்டை வரவேற்கும் உணவுகள்! சுவையான மாங்காய் பச்சடி செய்வது எப்படி?
Tamil New Year Special : தமிழ் புத்தாண்டை வரவேற்கும் உணவுகள்! சுவையான மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

வெல்லம் – அரை கப்

தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

அரிசி மாவு – ஒரு ஸ்பூன்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வெல்லம் உங்களுக்கு தேவையான அளவு அதிகரித்தோ, குறைத்தோ கொள்ளலாம்.

செய்முறை

மாங்காயின் தோலை நீக்கவேண்டும். ஒன்றிரண்டாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாங்காயை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து, வேகவைக்க வேண்டும். மாங்காய்கள் நன்றாக வெந்து வரவேண்டும்.

கடாயில், வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்லம் உருகும் வரை காய்ச்ச வேண்டும். வெல்லம் உருகியவுடன், தீயை குறைக்க வேண்டும்.

மாங்காய்கள் நன்றாக மசிந்தவுடன், வெல்லத்தை வடிகட்டி, அதில் சேர்க்க வேண்டும்.

பச்சை மிளகாய், பச்சரிசி மாவு மற்றும் துருவிய தேங்காயை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். பச்சை மிளகாயை தாளித்தும் கொள்ளலாம் அல்லது அரைத்தும் கொள்ளலாம். மிளகாயை அரைக்கும்போது அதிக காரமாக இருக்கும். எனவே அரைக்காமலும் பயன்படுத்தலாம்.

அரைத்தவற்றை மாங்காய் மற்றும் வெல்லக் கலவையுடன் கலக்க வேண்டும்.

இதை இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவேண்டும். இது தண்ணீராக இருந்தால் கெட்டியாகும் வரை வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அரிசி மாவு சேர்க்கலாம் அல்லது மாங்காயை அரைத்து சேர்க்கலாம்.

எண்ணெயை சூடாக்கி, அதில் கடுகு சேர்த்து தாளித்து மாங்காய் பச்சடியில் சேர்க்க வேண்டும்.

மாங்காய் பச்சடி சாப்பிட தயாராக உள்ளது.

அதிக பச்சரிசி மாவு சேர்த்தால் கெட்டியாகிவிடும்.

கொஞ்சம் பழுத்த மாங்காயாக இருக்க வேண்டும். பழவெட்டு பதத்தில் இருக்கவேண்டும்.

வெல்லத்தின் அளவை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

வெல்லம் குறைவாக இருந்தால் சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

மாங்காயின் நன்மைகள்

மாங்காயை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? ஆனால் அதில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொண்டால் அது உங்களுக்கு இன்னும் பிடித்த காய் ஆகிவிடும்.

உடல் எடையை குறைக்க மாங்காய் உதவும். அசிடிட்டி பிரச்னையை தீர்க்க உதவும். கர்ப்பிணிகளுக்கு, புளிப்பு சுவையை சாப்பிட சிலருக்கு தோன்றும். அப்போது மாங்காயை சாப்பிடலாம். அது அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் காலை நேரத்தில் ஏற்படும் சோர்வை தடுக்க உதவும்.

மாங்காயை சாப்பிடும்போது, அது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதனால் மாங்காயை மதிய உணவுக்குப்பின்னர் எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு ஆற்றலை வழங்கி, தூங்கி விழுவதிலிருந்து தப்பிக்க வைக்கும். மாங்காய் பித்தத்தை அதிகம் சுரக்கச்செய்கிறது.

இதனால், கல்லீரலுக்கு மாங்காய் நன்மை தரும் உணவு. குடலில் உள்ள தொற்றுகளை குணப்படுத்தவும் மாங்காய் உதவுகிறது. குடலை சுத்தம் செய்கிறது. மாங்காய் வெயில் காலத்தில்தான் அதிகம் கிடைக்கும்.

மாங்காயை அப்போது எடுத்துக்கொள்வது வெயிலால் ஏற்படும் வியர்குரு வராமல் தடுப்பதுடன், வெயிலால் ஏற்படும் அபாயங்களில் இருந்தும் நம்மை காக்கிறது. மாங்காயில் உள்ள வைட்டமின் சி ரத்த நாளங்களின் நீட்சித்தன்மையை அதிகரிக்கிறது.

அதனுடன், புதிய ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதற்கும் உதவுகிறது. மலச்சிக்கல் நீங்க மாங்காய் உதவுகிறது. உப்பு மற்றும் தேன் தொட்டு சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மாங்காய் சாறு அருந்தினால் கோடை காலத்தில் வியர்வை மூலம் வெளியேறும் சோடியம் குளோரைட் மற்றும் இரும்புச்சத்து தடுக்கப்படுகிறது. தயிருடன் மாங்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

பல் பராமரிக்க உதவுகிறது. மாங்காயை கடித்து சாப்பிடுவதால் பற்கள் பலமடைகின்றன. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு தடுக்கப்படுகிறது. வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தையாவது தடுக்கப்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

ஆனால் இவ்வளவு நன்மைகள் நிறைந்த மாங்காயை நாம் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அது உடலில் சூட்டை ஏற்படுத்தும். அதனால் அதிகம் எடுத்துக்கொண்டால், வயிற்று வலி, வயிற்றில் உபாதைகளை ஏற்படுத்தும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

WhatsApp channel