தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tips : எந்த உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது; எவற்றை மீண்டும் சூடுபடுத்தி உண்ணக்கூடாது – ஹெல்த் டிப்ஸ்!

Health Tips : எந்த உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது; எவற்றை மீண்டும் சூடுபடுத்தி உண்ணக்கூடாது – ஹெல்த் டிப்ஸ்!

Priyadarshini R HT Tamil
Aug 13, 2023 02:50 PM IST

Health Tips : மேலும் எளிமையான, ஆரோக்கியமான உணவுப்பழக்கமே சிறந்தது. எனவே எளிமையான உணவை அவ்வப்போது சமைத்து உண்ணலாம் அல்லது சாலட்களை செய்து உண்ணலாம். அனைவரும் வீட்டில் வேலையை பகிர்ந்து செய்ய வேண்டும். அப்போது வேலைப்பளுவும் குறையும், ஆரோக்கியமான உணவை சமைக்கவும் முடியும்.

உடல் ஆரோக்கிய குறிப்புகள்
உடல் ஆரோக்கிய குறிப்புகள்

ட்ரெண்டிங் செய்திகள்

பாலுடன் புளிப்பான எந்த பொருளையும் சேர்த்து எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் பாலுடன் புளிப்பான பொருள் எது சென்றாலும் அது தயிராகி பின்னர்தான் ஜீரணத்துக்கு வழிவகுப்ழும். மோருடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது. இறைச்சியுடன் விளக்கெண்ணெயை சேர்க்கக்கூடாது. முள்ளங்கியும் பாலும் ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது. 

அகத்திக்கீரையையும், ஆல்கஹாலையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. தேனையும், நெய்யையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை எதிர் உணவுகள் எனப்படும். இவற்றை ஒன்றாக எடுத்துக்கொண்டால் வயிற்றில் சில பிரச்னைகளை அது ஏற்படுத்தும்.

பசலைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

திப்பிலியுடன் மீன் அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் இறப்பு உண்டாகிவிடுமாம். மீன் பொறித்த எண்ணெய் கூட திப்பிலியுடன் பயன்படுத்தக்கூடாது என ஆயுர்வேதம் கூறுகிறது.

தேன் சாப்பிட்ட பிறகு ஒயினோ அல்லது இனிப்பு உணவுகளோ சாப்பிடக் கூடாது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக்கூடும்.

முருங்கை, முள்ளங்கி, மற்றும் பூண்டு உணவுகளை சாப்பிட்ட பின் பால் அருந்தக் கூடாது. இதனால் சரும அலர்ஜிகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆயுர்வேத சிகிச்சை முறை கூறுகிறது.

எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு, மாதுளை போன்ற புளிப்பான பழங்களுடனோ அல்லது அவற்றை சாப்பிட்டவுடனோ பால் குடித்தால் ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

மோருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவது கூடாது. செரிமானத்தில் கோளாறுகளை ஏற்படுத்தும்.

இறைச்சி மற்றும் விளக்கெண்ணெயில் சமைத்த இறைச்சி உடலில் செரிமானம் மட்டுமல்லாது, வயிறு சம்பந்தமான கோளாறுகளை உண்டாக்கிவிடும்.

மேலும் அசைவ உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. மதியம் 3 மணிக்கு மேல் அசைவம் சாப்பிடுவது அஜீரண கோளாறை ஏற்படுத்தும். இறைச்சி உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது பொதுவாகவே கவனமுடன் செயல்படுவது நல்லது.

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத உணவுகள்

சிக்கன் - கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானமாக அதிக நேரம் எடுக்கும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது, அதன் புரதம் மேலும் அதிகரிக்கும். அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறிவிடும். எனவே, அதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக்கூடாது. ஒருமுறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாக சாப்பிட வேண்டும் என்றால், சான்விட்சாக செய்து சாப்பிடலாம்.

கீரை -கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும். குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

முட்டை - முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக்கூடாது.

காளான் - காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

சாப்பாடு - அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்துவிடும்.

உருளைக்கிழங்கு - உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதனால் நச்சுத்தன்மை உள்ளதாகிவிடும். வாந்தி, குமட்டல், உடல் நல பாதிப்பு என எல்லாம் ஏற்படும்.

சமையல் எண்ணெய் - எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக்கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.

பீட்ரூட் -பீட்ரூட்டும் கீரை வகைகளைப்போல அதிகளவில் நைட்ரேட்களை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக்கூடாது.

மேலும் அந்தந்த வேளைக்கு தேவையான உணவை அவ்வப்போது செய்துகொள்வது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் குழம்பை மட்டுமே மீண்டும் சூடு செய்யும்படி பார்த்துக்கொண்டு மற்ற உணவுகளை அடிக்கடி சூடுபடுத்தி உண்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் எளிமையான, ஆரோக்கியமான உணவுப்பழக்கமே சிறந்தது. எனவே எளிமையான உணவை அவ்வப்போது சமைத்து உண்ணலாம் அல்லது சாலட்களை செய்து உண்ணலாம். அனைவரும் வீட்டில் வேலையை பகிர்ந்து செய்ய வேண்டும். அப்போது வேலைப்பளுவும் குறையும், ஆரோக்கியமான உணவை சமைக்கவும் முடியும்.

WhatsApp channel

டாபிக்ஸ்