AR Rahman: இசைக்கச்சேரி சர்ச்சை.. தவறு செய்து தனி மரமாய் நிற்கும் ரஹ்மான்.. தம்பியாய் கைகோர்த்த யுவன்! - அறிக்கை உள்ளே!
நமமுடைய நோக்கம் சரியானதாக இருந்தாலும், சில விஷயங்கள் தவறாக சென்று விடும். ஆகையால் இசைக்கும் மதிப்பளிக்கும் மக்கள் கடுமையான அழுத்ததை சந்திக்க நேரிடலாம்.
நேற்று முன் தினம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகினர். இது சம்பந்தமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனத்திடன் காவல்துறை விசாரணை நடத்தியது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த சம்பவத்தால் ஏ.ஆர்.ரஹ்மானை பலர் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக யுவன் ஷங்கர் ராஜா அறிக்கை ஒன்றைவெளியிட்டு இருக்கிறார்.
அந்த அறிக்கையில், “ ஒரு பெரிய இசைக்கச்சேரியை நடத்துவது என்பது மிகவும் சிக்கலான வேலை. இதில் மக்களைக்கட்டுப்படுத்துவது, போக்குவரத்தை சரிசெய்தல் என பல விஷயங்கள் இருக்கின்றன. ஒருங்கிணைப்பில் பிரச்சினை எழும் போது கூட்ட நெரிசல் உள்ளிட்ட எதிர்பாராத பிரச்சினைகள் பெரிய இசைக்கச்சேரிகள் நடக்கும் போது உண்டாகும்.
நமமுடைய நோக்கம் சரியானதாக இருந்தாலும், சில விஷயங்கள் தவறாக சென்று விடும். ஆகையால் இசைக்கும் மதிப்பளிக்கும் மக்கள் கடுமையான அழுத்ததை சந்திக்க நேரிடலாம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தயாரிப்பாளர்களும் இந்த சம்பவத்தை கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கியம். நாங்கள் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது அனைத்தும் சுமூகமாக நடப்பதையும், மக்கள் பாதுகாப்பாக இருப்பதையும் கண்காணிக்க தயாரிப்பாளர்கள் மேல் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம்.
ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது உண்மையில் மனதை கனக்கச் செய்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடல் உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாக பங்கெடுக்க அனைத்து கலைஞர்களுக்கு இந்த சம்பவம் எச்சரிக்கை மணியாக அடித்திருக்கிறது. இந்த விஷயத்தில் சக கலைஞராக நான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நான் நிற்கிறேன்” என்று அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
டாபிக்ஸ்