தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil 7: 'கவினை அடித்தது ஏன்' - 5 ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த பிரதீப்!

Bigg Boss Tamil 7: 'கவினை அடித்தது ஏன்' - 5 ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த பிரதீப்!

Marimuthu M HT Tamil
Nov 04, 2023 11:38 AM IST

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கவினை அடித்தது ஏன் என உண்மையைப் போட்டு உடைத்துள்ளார், பிரதீப் ஆண்டனி.

'கவினை அடித்தது ஏன்' - 5 ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த ப்ரதீப்!
'கவினை அடித்தது ஏன்' - 5 ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த ப்ரதீப்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஏதாவது ஒரு சின்ன கன்டென்ட் கிடைத்தாலும் அதற்காக Strategy-ஐ உருவாக்கி விளையாடி, தங்கள் மீதான கவனக்குவியலை அதிகரித்துவிடுகின்றனர். அதில் எதிர்மறை Strategy-யை உருவாக்கி பக்காவாக விளையாடி வருகிறார், பிரதீப் ஆண்டனி. இதனால் ஒவ்வொருமுறையும் பிக்பாஸ் ரசிகர்களின் வாக்குகளால் தப்பிக்கிறார். 

இந்நிலையில் பிரதீப் ஆண்டனி, தான் பிக்பாஸ் வீட்டுக்குள் சீஷன் 3-யின் போதே வந்துள்ளதாகவும், அப்போது கவினை அடித்ததாகவும் அதற்கான காரணம் இது தான் எனவும் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

அந்த உரையாடலில் விசித்ரா, பிரதீப் ஆண்டனி மற்றும் சீரியல் நடிகர் தினேஷ் கோபால்சாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அப்போது கவினை அடித்தது  பற்றி மனம் திறந்து பிரதீப் ஆண்டனி விசித்திராவிடம் பேசியுள்ளார்.

அந்த உரையாடலில், 'நான் முதன்முதலில் பயன்படுத்திய கேரவன் பிக்பாஸ் வீட்டில் தான் கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 3 நடக்கும்போது, கெஸ்ட் எண்ட்ரியில் வந்திருக்கேன். வனிதாவை நான் அங்கு தான் பார்த்தேன். வனிதாவுக்கு நான் ஐ லவ் யூ சொன்னேன். ஒரே ஒருநாள் தான் வந்தேன். கவினை அடித்தேன். ஏன்னா, ஏன் மேல் நெகட்டிவிட்டியை வாங்கிக்கிறதுக்கு. அப்போது, என்னைப் பற்றி நிறையபேர் பேசுவாங்க. அவனைப் பத்தி பேசமாட்டங்கல. அது ஒரு ஸ்ட்ரேடிஜி தான்’ என விசித்ராவிடம் சொல்கிறார்.

அதற்கு பிரதீப் அப்போதே ஸ்ட்ரேடிஜி போட்டு விளையாடியுள்ளார் என நடிகர் தினேஷ் கூறுகிறார். 

அதற்கு விசித்ரா பிரதீப்பிடம் கவினை கை வைத்து அடித்தது தவறு என்றும், அதனால் அவர் மனம் உடைந்து இருக்க வாய்ப்புண்டு எனவும் தெரிவிக்கிறார்.

மேலும், ‘ஏன் கெட்டவார்த்தையில் கூட திட்டியிருக்கலாம்ல, எதுக்கு அடிச்ச’ என்கிறார், விசித்ரா. உடனே, ‘நீங்க வெளியில் போய் பாருங்க. தெரியும்’ என்கிறார்.

’அதெல்லாம் ஓகே. அவனோட பாயிண்ட் ஆஃப் வியூவில் மட்டும் தான் கூறுகிறேன். மத்தவங்க மேல் கைவைக்கிறது தவறு. அது சாகும் வரை மறக்காது’ எனக்கூறுகிறார், விசித்ரா.

அதற்கு பிரதீப், மறக்குமா நெஞ்சம்.. மறக்குமா சலனம் எனப் பாடிவிட்டு நைஸாக அந்த கலந்துரையாடலில் இருந்து நழுவுகிறார்.  இவ்வாறாக முடிகிறது அந்த கலந்துரையாடல்!

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v

 

 

 

 

 

 

IPL_Entry_Point