Meenakshi Ponnunga : அவமானப்பட்ட ரங்கநாயகி.. வெற்றி போட்ட கண்டிஷன்!
மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் காண்போம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரண்யாவைப் பரிசோதிக்கும் டாக்டர் சரண்யா கர்ப்பம் என்பதைச் சொல்லிவிட, ரங்கநாயகி அதிர்ச்சியாகிறாள்.
சரண்யா எல்லா உண்மைகளையும் சொல்கிறாள். சக்தி கர்ப்பம் இல்லை என்று சொல்ல, இனிமேல் அந்தக் கல்யாணம் நடக்காது என்று செல்வமுருகன் சொல்லிவிட, வெற்றி பூஜா கல்யாணம் நின்று போகிறது. ரங்கநாயகி எல்லார் முன்னிலும் அவமானப்பட்டு தன் வீட்டுக்குப் போகிறாள்.
அதை தொடர்ந்து ரங்கநாயகி தன் வீட்டில் ஒரு அறையில் போய் கதவை பூட்டிக் கொள்கிறாள். பூஜா மண்டபத்தில் தாலியுடனேயே இருக்கிறாள். சரளாவிடம் கோபித்துக்கொண்டு தாலியுடன் வெளியே போகிறாள்.
வெற்றி அசோக்கை கோபத்தில் அடிக்கிறான். இரண்டு நாள் டயம், அதுக்குள்ள ஊர்ப்பஞ்சயாத்துல உண்மையை ஒத்துக்கிட்டு, சரண்யா வயித்துல வளர்றது உன் குழந்தைதான் சொல்லி அவளை சீர் செனத்தியோட வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போகணும் என்று கெடு விதிக்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்