Thani Oruvan 2: மித்ரனை தேடி வரும் வில்லன் இவர்தானா? அப்போ செம மாஸ்தான்
தனி ஒருவன் 2 குறித்த அறிவிப்பை அந்த படம் வெளியாகி 8 ஆண்டுகள் கழித்த சரியான முதல் பாகத்தின் ரிலீஸ் தேதியில் அறிவித்து படக்குழுவினர் சர்ப்ரைஸ் அளித்துள்ளனர். தற்போது படத்தின் வில்லன் யாராக இருக்ககூடும் என்று மிகப் பெரிய விவதாமே நடைபெற்று வருகிறது.
2015இல் வெளியான ஆக்ஷன் த்ரில்லர் படமான தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா, நாசர் உள்பட பலரும் நடித்திருந்தார்கள். மிகவும் ஸ்டைலிஷான வில்லனாக நடித்திருந்த அரவிந்தசாமிக்கு, இந்த படம் கம்பேக் படமாக அமைந்ததுடன், அவரது கதாபாத்திரம் வெகுவாக கொண்டாடப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
தமிழ் சினிமாவில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஹீரோ கொண்டாட்டங்களை தூர வைத்து விட்டு, வில்லன் பிறப்பதை அறிமுக காட்சியாக அமைத்து, ஹீரோ - வில்லன் ஆகியோருக்கு இடையிலான கேட் அண்ட் ரேட் போட்டியை விறுவிறுப்பான திரைக்கதை அம்சத்துடன் தனி ஒருவன் படத்தை இயக்கியிருந்தார் மோகன் ராஜா.
இதையடுத்து தனி ஒருவன் 2 படத்தின் அறிவிப்பையும் மிகவும் வித்தியாசமாக சுமார் 3 நிமிடம் வரை ஓடக்கூடிய டீஸர் மூலம் தெரியபடுத்தியுள்ளனர். இந்த பாகத்தில் ஜெயம் ரவி, முதல் பாகத்தில் நடித்த மித்ரன் ஆக நடிக்கிறார். அதேபோல் படத்தின் ஹீரோயினாகவும் நயன்தாரா நடிக்கிறார்.
இதை மட்டும் அறிவித்திருந்த படக்குழுவினர்கள் இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக படத்தின் வில்லன் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.
தனி ஒருவன் 2 டீஸரை வில்லன் யார் என்ற கேள்வியுடன் உருவாக்கியுள்ளார். அத்துடன் இந்தப் படத்தில் பிரதான கதாபாத்திரமான மித்ரன் வில்லனை தேடி போகமாட்டார், அவரை தேடி வில்லன் வருவார் என டீஸரில் கூறியிருப்பர்கள்.
இதை வைத்து தற்போது சினிமா அபிமானிகளும், நெட்டிசன்களும் வில்லன் யாராக இருக்கலாம் என்ற விவாதத்தை தொடங்கியுள்ளனர். முதல் பாகத்தில் வில்லனான சித்தார்த் அபிமன்யுவாக நடிதத் அரவிந்த சாமி இறப்பது போல் காட்டியிருப்பதால் கண்டிப்பாக அவர் வில்லனாக வரமாட்டார் என தெரிகிறது.
அதேபோல், தனி ஒருவன் படத்துக்கு பின்னர் மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தில் ஃபஹத் பாசில் வில்லத்தனம் மிக்க கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சொல்லப்போனால் இந்தப் படம் மூலம்தான் ஃபஹத் பாசில் தமிழில் அறிமுகமானார்.
அப்படி பார்க்கையில் வேலக்காரன் படத்தில் ஆதி என்கிற அதிபன் மாதவ் கேரக்டரில் தோன்றிய ஃபஹத் பாசில் வில்லனாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கிளப்பிவிட்டுள்ளனர். அதற்க ஏற்றார்போல் தனி ஒருவன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழுவினரும் ஃபஹத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் ஃபஹத் பாசில் நடிக்கும் பட்சத்தில் படம் வேற லெவல் மாஸ்ஸாக இருப்பதுடன், மோகன் ராஜா யுனிவர்சில் இடம்பிடிக்கும். இருப்பினும் வில்லன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்