Thankar Bachan: அஜித்திற்கு கதை இருக்கு.. ஆனா ஒதுங்கிட்டேன்.. தங்கர் பச்சான்
அஜித்துடன் படம் செய்வது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் பேட்டி அளித்து உள்ளார்.
இயக்குநர் தங்கர் பச்சான், கருமேகங்கள் கலைகின்றன படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் விளம்பர பணிகள் நடந்து வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனிடையே சமீபத்தில் தங்கர் பச்சான் பிரபல யூ-டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், " அஜித்துடன் நான் இரண்டு திரைப்படங்கள் எடுத்த பிறகு அவருக்கு ஒரு கதை கூட சொல்லவில்லை. அவரின் அப்பா இறப்பிற்குடன் நானும் என் மகனும் சென்றிருந்தோம். அவரின் தந்தைக்காகவே அந்த வீட்டை கட்டினார். நாங்கள் எல்லாம் ஒன்றாக தான் பைபிள் செல்வோம். கிராமங்களுக்கு கூட வந்திருக்கிறார்.
அஜித் குடும்பத்தை மிகவும் நேசிக்க கூடியவர். அவரைப் போன்ற ஒரு நபரை யாராலும் பார்க்க முடியாது. நான் தான் இடைவெளி வைத்துக் கொண்டேன். தந்தையின் இறப்பில் கூட என்னுடன் பேசுவதை விட என் மகனிடமே அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
நான் நினைத்தால் இப்போது கூட அஜித்திற்கு கதை ஒன்று சொல்ல முடியும். ஆனால் நான் சொல்ல மாட்டேன். காரணம் அவரின் உயரம் எங்கோ சென்று விட்டது. அவரின் படங்கள் அதிகமாக விற்பனையாகிறது. இப்படி இருக்கும் சூழலில் அவர் எனக்கு பணம் செய்து கொடுப்பாரா என்பது ஒரு சந்தேகம் தான்.
அவருக்கு தகுந்தார் போலவும் என் படத்திற்கான தரமும் படத்தில் இருக்க வேண்டும். இதில் ஒன்று கூட நடக்காமல் போனால் சிரமம் ஏற்பட்டு விடும். விசுவாசம் படத்தில் அவரின் உணர்வுபூர்வமான காட்சிகள் சிறப்பாக இருந்தது. நான் இன்னும் அவரிடம் கதை சொல்லவில்லை" என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்