SV Sekar: ‘ஜாதி படம் எடுக்குறீங்க.. ஜாதிக்கு செலவு பண்ணுங்க’ எஸ்.வி.சேகர் புது ஐடியா!
‘இதற்கு என்ன காரணம்? சினிமா தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை இயக்குனர் முத்தையா தான் ஆரம்பித்து வைத்தார்’
பாஜக ஆதரவாளரும், அண்ணாமலை எதிர்ப்பாளரும், வலதுசாரி சிந்தனையாளரும், முதல்வர் ஸ்டாலின் ஆதரவாளருமான எஸ்.வி.சேகர், நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியவற்றில் முக்கியமானவை இதோ:
ட்ரெண்டிங் செய்திகள்
‘‘ஜாதிகளை ஒழித்துவிட்டோம் என்று சொல்கிறோம், ஆனால் பள்ளிக்கு போனதும், என்ன ஜாதி என்று கேட்கிறோம். 25 ஆண்டுகளுக்கு முன், பள்ளியில் ஒவ்வொருவரின் டிபன் பாக்ஸை திறந்து சாப்பிட்டிருக்கிறோம். அப்போது எந்த ஜாதியும் பார்க்கவில்லை. திடீர்னு ஜாதிக்கு ஒரு கயிறு கட்டியிருக்கான்.
இதற்கு என்ன காரணம்? சினிமா தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை இயக்குனர் முத்தையா தான் ஆரம்பித்து வைத்தார், கொம்பன் படத்தில். தன் ஜாதியை உயர்த்துவது தப்பில்லை, அடுத்த ஜாதியை விட தன் ஜாதி உயர்ந்தது என காட்டக் கூடாது. தன் ஜாதிக்காரன் மட்டும் இந்த படத்தை பார்த்தால் போதும் என்று, ஜாதி படம் எடுப்பவர்கள் சொல்லுவார்களா?
ஜாதியை வைத்து எடுப்பவர்கள், அந்த லாபத்தை ஜாதியை மேம்படுத்த செலவழிக்கிறார்களா? நாங்குநேரியில் மாணவன் வெட்டப்பட்டிருக்கிறான். அந்த ஜாதியை வைத்து படம் எடுப்பவர்கள், அவங்க 20 லட்சம் ரூபாய் கொடுத்து, அந்த மாணவனுக்கு உதவலாமே!
கொம்பன் முத்தையா, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் எல்லாருக்கும் இது பொருந்தும்,’’
என்று அந்த பேட்டியில் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்