Rajinikanth:பெற்றோருக்கு சொந்த ஊரில் நினைவகம்; ஆனாலும் ரஜினி வைத்த ஒரு குறை!
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய தாய் தந்தையருக்கு நினைவகம் அமைத்து இருக்கிறார்
நடிகர் ரஜினிகாந்தின் பூர்வீக கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள நாச்சிக்குப்பம். ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உட்பட மூன்று மாநில எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அந்த கிராமம் அமைந்து இருக்கிறது. ரஜினிகாந்தின் அம்மா ரமாபாய் மற்றும் தந்தை ராமோஜி ராவ் அங்கு வசித்து வந்த நிலையில், ராமோஜிக்கு காவலர் வேலை கிடைக்க, குடும்பம் பெங்களூருக்கு குடிபெயர்ந்து இருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
ரஜினியின் அண்ணனான சத்திய நாராயண ராவ் உறவினர்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். இதனிடையே கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினிகாந்த் நாச்சிக்குப்பம் கிராமத்தில் தன்னுடைய பெற்றோருக்கு நினைவகம் அமைப்பதற்காக 2.40 ஏக்கர் அளவிலான நிலத்தை நாச்சிக்குப்பத்தில் வாங்கி இருக்கிறார். அத்தோடு அப்போதே தன்னுடைய அண்ணனை வைத்து அதற்கு அடிக்கல்லும் நாட்டினார்.
பாதுகாப்பிற்காக சுற்றிலும் வேலி அமைத்து, பெயர் பலகையும் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் நினைவகம் அமைப்பதற்கான பணிகள் எதுவுமே நடக்க வில்லை. இருந்தாலும் கூட, ரஜினியின் ரசிகர்கள் பொங்கல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களுக்கு அந்த இடத்தை பயன்படுத்தி வந்தனர். அவ்வப்போது அந்த இடம் குறித்து கேட்டு வந்த ரஜினி அங்கு பெற்றோருக்கு நினைவகம் அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்தார்.
இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு சென்ற ரஜினியின் அண்ணன் அந்த நிலத்தை நேரடியாக பராமரித்து வருகிறார். அதுமட்டுமல்ல அந்த பகுதி கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், கால்நடைகளுக்கு தனியாக தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு தற்போது ரஜினிகாந்தின் பெற்றோருக்கு நினைவகம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து அக்கிராம மக்கள் கூறும் போது, “ ரஜினிகாந்த் எங்கள் ஊரைச்சேர்ந்தவர் என்பது எங்களுக்கு பெருமையான விஷயம்தான். பெற்றோருக்கு நினைவிடம் கட்டி நலத்திட்ட பணிகள் நடந்தாலும் இங்கு ஒருமுறை கூட ரஜினி வரவில்லை. தற்போது பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைக்கப்பட்டுள்ளதால், ரஜினி ஒருமுறையாவது வரும் என்று நம்புகிறோம்” என்றனர்.
டாபிக்ஸ்