Kayal Serial: பிரபு புதைத்த இடத்தை நோண்டும் நபர்கள்; அச்சத்தில் உறைந்த கயல்! - பரபரக்கும் கயல் சீரியல்!
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கயல் சீரியலின் புரமோ வெளியாகி இருக்கிறது!
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் கயல். இந்த சீரியலில் கயல் கதாபாத்திரத்தில் சைத்ரா ரெட்டியும், எழில் ரோலில் சஞ்சீவும் நடிக்கிறார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்
கயல் சீரியலில் ஆர்த்தி - ஆனந்த் திருமணத்தின் போது ஆனந்தி தனக்கு தொல்லை கொடுத்த எழிலின் தம்பி பிரபுவை கொலை செய்துவிடுகிறாள்.
இந்த உண்மை கயலுக்கு தெரியவர தங்கையை காப்பாற்ற அவளின் உதவியுடன் பிரபுவின் சடலத்தை ஒரு மூட்டையில் கட்டி புதைத்து விட்டார்கள். இப்படி பரபரவென சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலின் இன்றைய புரமோ வெளியாகி இருக்கிறது.
அந்த புரமோவில் கயலும் ஆனந்தியும் பிரபுவை புதைத்த இடத்தை சிலர் ஜேசிபி வைத்து தோண்ட முற்படுகிறார்கள். இது கயலுக்கு தெரியவர கயல் சம்பவ இடத்திற்குச் செல்கிறாள்.
அங்கு அந்த இடத்தை தோண்டுவதற்கான பணிகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடையும் கயல் அய்யோ.. குழியை தோண்டினால் தடயம் வெளிப்பட்டு விடுமே என்று பதறுகிறாள். இதனையடுத்து கயல் என்ன செய்யப்போகிறாள் என்பது தொடர்பான நிகழ்வுகள்தான் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகும் என்பது தெரிகிறது!
டாபிக்ஸ்