தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: புது குணசேகரன் என்ட்ரி.. அரண்டுபோய் இருக்கும் எதிர்நீச்சல் குடும்பம் - எதிர்நீச்சல் புரமோ இங்கே!

Ethirneechal: புது குணசேகரன் என்ட்ரி.. அரண்டுபோய் இருக்கும் எதிர்நீச்சல் குடும்பம் - எதிர்நீச்சல் புரமோ இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 20, 2023 12:11 PM IST

எதிர்நீச்சல் சீரியலின் புரமோ வெளியானது

எதிர்நீச்சல் புரமோ!
எதிர்நீச்சல் புரமோ!

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியலை அவருக்காக டிவி முன்னே அமர்ந்து பார்த்த ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், அண்மையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

அவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் அந்தக் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேலராம மூர்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து அவரிடம் கேட்ட பேசிக்கொண்டிருக்கிறார்கள்... வந்தால் செய்யலாம்... என்று கூறியிருந்தார்.

இதனிடையே மாரிமுத்து இல்லாமல் சென்று கொண்டிருந்த சீரியல் அதற்போது அடுத்த மாரிமுத்து வருவதற்கான அச்சாரத்தை போட்டு இருக்கிறது. ஆம் இன்றைய புரமோ அந்த வகையில்தான் அமைந்திருக்கிறது.

இன்று வெளியாகி இருக்கும் புரமோவில், குணசேகரன் வீட்டை விட்டு சென்று விட்ட நிலையில், அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை பட்டம்மா வாசிக்கிறார். இதனைப்பார்த்த நந்தினி இந்த ட்ராமைத்தான் அடிக்கடி செய்கிறாரே.. என்றாள். 

அதற்கு பட்டம்மா இந்த முறை குணசேகரன் வருவான். ஆனால் மிகவும் ஆபத்தான ஆளாக வரப்போகிறான் என்று சொல்கிறார். இதனிடையே ஜான்சி ராணியை குறிவைத்து விசாலாட்சியிடம், அத்தை கண்டதையும் கொண்டு வந்து நடு வீட்டில் வைக்கிறீர்கள் என்று சாடுகிறாள் நந்தினி. அதற்கு விசாலாட்சி கண்டவங்களோடு கூத்தடித்துதான் என்னுடைய புள்ளையை நான் தொலைத்து கொண்டு நிற்கிறேன் என்று பேச, நந்தினி அதிர்ச்சி அடைகிறாள்.” அத்துடன் இன்றைய புரமோ முடிகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்