Kajal Aggarwal : தென்னிந்திய சினிமா அளவிற்கு இந்தி இல்லை.. மனம்திறந்த காஜல்!
தென்னிந்திய சினிமாவுக்கு நடிக்க வந்தது ஏன்? என்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் காஜல் அகர்வால். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தென்னிந்திய சினிமா தான் சிறந்தது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “இந்தி என் தாய்மொழி. இந்தி திரைப்படங்கள் பார்த்துதான் வளர்தேன். ஆனால்,தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு இந்தி திரையுலகில் குறைவு என்றே கருதுகிறேன்.
அதனால் இந்தியை விட்டுவிட்டு தென்னிந்திய சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். ஏராளமானவர்கள், தங்கள் திரை வாழ்க்கையை இந்தியில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் நாடு தழுவிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறார்கள்.
நான் பிறந்தது மும்பையில் என்றாலும் தென்னிந்திய திரையுலகில்தான் எனது சினிமா வாழ்க்கை ஆரம்பம் ஆனது. தென்னிந்திய சினிமா துறையில் நட்புறவுடன் கூடிய நல்ல சூழ்நிலை உள்ளது.
அங்கு திறமையான இயக்குனர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் இருக்கிறார்கள்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் தனித்துவமான திரைப்படங்கள் வருகின்றன. சிறந்த வேடங்களும் கிடைக்கின்றன”என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்