April14 Movie Releases:வெள்ளிக்கிழமை விருந்து;எந்த படம் நல்லா இருக்கு?-விமர்சனம்
இன்று வெளியாகி இருக்கும் திரைப்படங்களில் எந்த திரைப்படம் நன்றாக இருக்கிறது? எந்த படத்திற்கு செல்லலாம் உள்ளிட்ட விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்
நடிகர் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ருத்ரன். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி இருக்கிறார். தன் குடும்பத்தை தீர்த்துக் கட்டிய வில்லனையும் அவனது ஆட்களையும் கதாநாயகன் பழி வாங்கும் பழைய கதையே ருத்ரன். எதற்காக? ஏன்? என்பது மீதிக்கதை
ட்ரெண்டிங் செய்திகள்
சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
வாய் பேச முடியாத, காதும் சரியாக கேட்காத,சிவில் இன்ஜினியர் அருள் நிதியின் அப்பா பாரதிராஜா விபத்து ஒன்றை சந்தித்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப் படுகிறார். அங்கு பணிபுரியும் பணியாட்கள் தங்கள் லாபத்துக்காக சில கொலைகளை அரங்கேற்றுகிறார் கள். அதில் ஒன்று அருள்நிதியின் அக்கா மகளின் கண்ணில் சிக்கி விடுகிறது. அதைத் தெரிந்து கொண்ட அவர்கள் அந்தப் பெண்ணை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்கள். அவர்கள் திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் கதை!
உடன் பிறந்த அண்ணன் கைவிட்டு விட, அம்மா, மாற்றுத் திறனாளி அக்கா, படுத்த படுக்கையாக கிடக்கும் அப்பா ஆகியோரை வைத்துக்கொண்டு சுயமரியாதையையாக வாழ்க்கையை ஓட்டி வருகிறார் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த நிலையில்தான் அவருக்கு தங்க நகைக்கடை மூலமாக கார் ஒன்று பம்பர் பரிசாக கிடைக்கிறது. இதைத்தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் அதை அபகரிக்க முயற்சிக்கிறார். காரை தனதாக்கி கொள்ள முயற்சிக்கிறது ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பம். இறுதியில் அந்தக்கார் யாருக்குச் சென்றது? அண்ணன் ஏன் அந்தக் காரை அபகரிக்க முயற்சி செய்கிறான் என்பதற்கான பதில்களே படத்தின் கதை!
கோவை தலைக்கரை கிராமத்தில் ஜாதி மாறி கல்யாணம் செய்ய முயற்சிக்கும் ஆண்களை அடுத்தடுத்து கொல்கிறது ஒரு பேய். அந்தப் பேயை பற்றி தெரிந்து கொள்ள ஊரின் இன்ஸ்பெக்டர், மாஸ்டர் மகேந்திரனையும் அவரது நண்பர்களையும் அங்கு அனுப்புகிறார். இறுதியில் அந்தப் பேயை பற்றி அவர்கள் தெரிந்து கொண்டார்களா? அந்தப் பேய் ஏன் இப்படி ஜாதி வெறி பிடித்து அலைகிறது? என்பதே படத்தின் கதை.
டாபிக்ஸ்