தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: 'நைட்டு பூரா தூங்காம..' ரஜினி குறித்த உண்மையை உடைத்த செந்தில்!

Rajinikanth: 'நைட்டு பூரா தூங்காம..' ரஜினி குறித்த உண்மையை உடைத்த செந்தில்!

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 13, 2023 11:42 AM IST

ரஜினிசார் காமடியை பொறுத்தவை டெவலப் பண்ணுவார். படத்துக்கு வந்துட்டா அதுலயே முழுசா இருப்பார். நைட்டு பூரா தூங்கமாட்டார்.

ரஜினி குறித்து மனம் திறந்த செந்தில்
ரஜினி குறித்து மனம் திறந்த செந்தில்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாட்டில் நகைச்சுவை என்றால் முதலில் நியாபகம் வரும் வெகு சிலரில் கவுண்டமணி செந்தில் சார் என்பதை யாராலும் மறக்க முடியாது. இது வரலாறாகவே மாறிவிட்டது. உங்களுக்கு இது எப்படி தோன்றுகிறது என்றார்.  

அதற்கு பதில் அளித்த நடிகர் செந்தில் "ரெம்ப பெருமைதான். ரஜினி சார் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். அவர் கூட நிறைய படங்கள் ஒர்க் பண்ணி இருக்கிறேன். ஒர நல்ல டைம்மிங் ஆர்ட்டிஸ்ட். அந்த காலத்தில் நவரச நாயன்னு முத்து ராமனை சொல்வார்கள் அந்த வகையில் இவரிடமும் நவரசம் கலந்திருக்கிறது. எல்லாமும் பண்ணுவர், வில்லன், ஹீரோ, அப்பா, தாத்தா, காமெடி என முத்துராமன் மாதிரி எல்லா வேஷமும் செய்வார்" என்றார்.

மேலும் ரஜினி குறித்த சில கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதற்கு "ரஜினிசார் காமடியை பொறுத்தவை டெவலப் பண்ணுவார். படத்துக்கு வந்துட்டா அதுலயே முழுசா இருப்பார். நைட்டு பூரா தூங்கமாட்டார். கொஞ்ச நேரம் தூங்குவார். நைட்டு பூரா டைரக்டரோட காட்சிகள் குறித்து பிக்ஸ் பண்ணிடுவாங்க.. ஆனா பகல்ல காட்டி கொள்ள மாட்டார்.

படையப்பா படத்தில் மாப்பிள்ளை அவர்தா அவர் போட்டுருக்க சட்ட மட்டும் என்னது என்ன காமடியில் முதலில் 2 வரி 3 வரிதான் இருந்தது. அதை டெவலப்பண்ணது ரஜினி சார்தான்.

ரஜினி சாரின் டைமிங் மேல் தட்டு மக்களுக்கும் போய் சேரும். கீழ் தட்டுமக்களுக்கும் போய் சேரும் அதனால்தான் அவரது புகழ் உலகம் முழுவதும் போகிறது என்றார்.

வீரா படத்தின் போது ரஜினி சார் மாலை போட்டு பொன்னாடை போர்த்தி என்னை பாராட்டினார்.

அவர் ஒர நல்ல கேரக்டர். நல்ல இருக்குனா நல்லா இருக்குன்னு சொல்லிடுவார். நல்லா இல்லனா பேசாம போயிடுவார் அதுதான் அவரது குணம். அருணாச்சலத்தில் வந்து ஈக்குவலா விட்டு கொடுத்து ரஜினி சார் பண்ணினார்.

நாங்க நடிக்கும்போது வேப்பமரம் புளியமரம் கருலே மரம் தான் திண்ணை அப்படி எங்கயாவது உட்காந்துபோம். இப்பதா கேரவன் என்றார்.

ரஜினிசார் நல்ல மனிதன். மனித நேயம் கொண்டவர். கொரோனாவிற்கு முன் அனுமோகன் அவரது மகளுக்கு திருமணம் பிக்ஸ் பண்ணிட்டார். ஆனால் கொரோனா டைம் என்றதால அவரால் முடியவில்லை. நான் ரஜினிசாரை போய் பார் என்றேன். உடனே ரஜினி பணம் கொடுத்து விட்டார். கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது. ரஜினிசார் செய்வது வெளியில் யாருக்கும் தெரியாது" என்று செந்தில் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்