தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetha Raman: சுபாஷை பார்க்க வந்த இரண்டாவது மனைவி.. ராமுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Seetha Raman: சுபாஷை பார்க்க வந்த இரண்டாவது மனைவி.. ராமுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Aarthi V HT Tamil
Jul 28, 2023 01:05 PM IST

சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

சீதா ராமன்
சீதா ராமன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மதுமிதா மகாவுக்கு ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது, சீதா ராமிடம் இனிமே நீங்க தான் இந்த குடும்பம், ஆபிஸ் என எல்லாத்தையும் பார்த்துக்கணும், உங்க 3 தங்கச்சிகளோட வளர்ப்பு சரியில்லை, அதையும் நீங்க தான் சரி பண்ணனும் என்று சொல்ல ராமும் சரி என்று சொல்கிறான்.

அடுத்து இங்கே ஜெயிலில் சேதுவும் சுபாஷும் வேலை செய்து கொண்டிருக்க மற்ற கைதிகள் இவர்களை ஏய் போதை இங்க வா என்று சொல்லி வம்பிழுத்து கொண்டிருக்க இதனால் இவர்கள் அவர்களுடன் சண்டைக்கு செல்கின்றனர், அப்போது வார்டன் வந்து சுபாஷை பார்க்க யாரோ வந்திருப்பதாக சொல்ல அவன் சேதுவை கண்டு கொள்ளாமல் வெளியே வந்து பார்க்க சொப்னா என்ற பெயரில் அவருடைய இரண்டாவது மனைவி பார்க்க வந்திருக்கிறார்.

இதனால் சுபாஷ் பதற்றம் அடைய சொப்னா உங்கள பாக்காமல் கஷ்டமாக இருக்கு என தன்னுடைய தம்பியுடன் வந்து புலம்ப சுபாஷ் ஒரு வழியாக இவர்களை சமாளித்து அனுப்பி வைக்கிறான், அடுத்ததாக இங்கே வீட்டில் அர்ச்சனா துரையிடம் வந்து நானும் உங்களுக்கு தங்கச்சி மாதிரி தான், நீ மகா பத்தி ஏதோ ரகசியம் இருக்குனு சொல்லிட்டே இருக்கீங்களே, அது என்ன என்று கேட்கிறாள்.

சுதாரித்து கொள்ளும் துரை அதை உன்கிட்ட சொல்லணும்னா எனக்கு 10,000 ருபாய் பணம் வேண்டும் என்று கேட்க அவள் 5000 தருவதாக சொல்ல துரை நோ சொல்ல இறுதியில் 10,000 ருபாய் பணத்தை எடுத்து வர போகும் நேரத்தில் துரை போனில் கேமராவை ஆன் செய்து வைத்து விடுகிறான். அர்ச்சனா பணத்தை எடுத்து வந்து கொடுத்து ரகசியத்தை கேட்க சரக்கு அடிச்சிட்டு சொன்னா தான் சரியா இருக்கும், நான் போய் சரக்கு வாங்கிட்டு வரேன், நீ சைடிஸ் ரெடி பண்ணி வை என்று சொல்லி கிளம்புகிறான்.

அதனை தொடர்ந்து ராம் மற்றும் சீதா இருவரும் அப்பாவையும் சித்தப்பாவையும் பார்க்க ஜெயிலுக்கு வர அப்போது ஒரு நாளைக்கு ஒருமுறை தான் விசிட் பண்ண முடியும் என்று சொல்ல இணைக்கு நாங்க யாரும் பக்க வரலையே என்று சொல்ல அவங்க மனைவி வந்துட்டு போனாங்க என்று சொல்லி ஆதார் கார்ட் காபியை எடுத்து காட்ட இருவரும் அடைகின்றனர்.

இவங்க உங்க பேமிலி தானே என்று கேட்க ராம் இல்லை என்று சொல்ல வர சீதா ஆமா எங்க சித்தி தான் என்று சொல்லி ராமை அங்கிருந்து அழைத்து வருகிறாள், பிறகு ராமிடம் சுபாஷுக்கு வேறொரு குடும்பம் இருக்கு, எனக்கு ஏற்கனவே இந்த சந்தேகம் இருந்தது என்று சொல்ல அவன் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்