Samantha: திரையில் 13 ஆண்டு கடந்த சமந்தா! உருக்கமான ட்விட்; ரசிகர்கள் உற்சாகம்
13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் நாம் இப்போதுதான் தொடங்குகிறோம் என மனம் திறந்தார் சமந்தா
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் சமந்தா தனது திரைப்பயணத்தில் தற்போது 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து தற்போது தனது மகிழ்ச்சியை டுவிட்டர் பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவு தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது குஷி சகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தில் சமந்தாவின் நடிப்பைப் பலரும் பாராட்டினர். சமீபத்தில் அரிய வகை நோயான மயோசிடிஸ் நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிலிருந்து விரைவில் குணமடைதல் என்றும் கடந்த அக்டோபர் மாதம் அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாகக் குணமடையச் சற்று காலம் எடுக்கும், அதேசமயம் அடிக்கடி சோர்வு ஏற்படும் என மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சமந்தா கடந்த 2017ம் ஆண்டு நாக சைதண்யாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். ஆனால் தொடர்ச்சியாக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். திருமண விவாகரத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் கிசுகிசுக்களுக்கெல்லாம் பெரிதாக உணர்ச்சி வசப்படாத சமந்தா தொடர்ச்சியாக தனது திரைப்பயணத்தை தொடந்தார்.
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா திமிழ் திரை உலகில் அறிமுகமானால். அதேநேரம் இந்த படத்தில் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர்பானாகாத்தாடி, நான்ஈ, நீதானே என் பொன்வசந்தம், தெறி மெர்சல், சீமராஜா, யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது திரை உலகிற்கு வந்து 13 ஆண்டுகள் நிறை பெற்றுள்ளது. இந்நிலையில் விட்டரில் #13PhenomenalYrsOfSamantha எனும் ஹேஷ்டாக் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதுகுறித்து சமந்தா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"இந்த அன்பை நான் உணர்கிறேன்... அதுதான் என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது... இப்போதும் என்றும், நான் என்னவாக இருக்கிறேன் என்பது உங்களால் தான். 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் நாம் இப்போதுதான் தொடங்குகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவின் இந்த ட்விட் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் சமந்தா தமிழகத்தின் பழனி கோவிலுக்கு சென்றார். 600 படிகள் ஏறி ஒவ்வொரு படியிலும் கற்பூரம் ஏற்றி கடவுளை தரிசித்தார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்