Samantha: ஆக்ஸிஜன் மாஸ்க்.. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா; ரசிகர்கள் கவலை
நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போன்ற புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது தொடர் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
ஜிம்மில் கடுமையாக வேலை செய்யும் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதில் முதலில் தனக்கு 16 வயதாக இருக்கும் போது எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். பிறகு தனது செல்ல நாய்களின் போட்டோக்களை வெளியிட்டு, அதில் மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து இருக்கும் படி உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருக்கும் சமந்தா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். மீண்டும் மருத்துவமனையிலா? என்று குழப்பத்தில் உள்ளனர்.
மற்றொரு புகைப்படத்தில், ஹைபர்பேரிக் தெரபி பற்றி தெரிந்துகொள்ள ஒரு தேடல் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளார். சாகுந்தலம் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனக்கு உடல்நிலை முழுமையாக சரியாகவில்லை என்றும், ஸ்டைலுக்காக இப்படி கண்ணாடி அணியவில்லை என்றும், லைட்டை கூட தாங்க முடியவில்லை என சமந்தா கூறி இருந்தார்.
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சிகிச்சை முறையை தொடர வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்