Aiadmk Madurai Mannadu: அதிமுக மேடையில் ரோபா ஷங்கர்.. வைரலாகும் பரிதாப போட்டோ!
அதிமுக எழுச்சி மாநாட்டில் ரோபோ ஷங்கர் கலந்து கொண்டிருக்கிறார்.
மேடை நிகழ்ச்சிகள் சின்னத்திரை உள்ளிட்டவற்றில் பிரபலமடைந்து தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருவபர் நடிகர் ரோபா ஷங்கர். தனுஷ், சிவகார்த்திகேயன், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்த ரோபோ ஷங்கர் தன்னிடம் இருந்த மது உள்ளிட்ட கெட்ட பழக்க வழக்கங்களால் நோய் வாய் பட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனால் ஆளே மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக தோன்றினார். இதனையடுத்து ரோபோ ஷங்கர் பற்றி பலரும் பல்வேறு விதமாக சமூகவலைதளங்களில் பேச ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்த ரோபோ ஷங்கர் தரப்பு மது உள்ளிட்ட கெட்ட பழக்கவழக்கங்களால் மஞ்சள் காமாலை நோய் வந்ததாகவும், தற்போது அதற்கான சிகிச்சை எடுத்து நன்றாக இருப்பதாகவும் கூறியது. இதனைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று மீண்டும் பழைய நிலைமைக்கே திரும்பிய ரோபோ ஷங்கர் சமூகவலைதளங்களில் குடும்பத்துடன் ரீல்களை பதிவு செய்து வருகிறார்.
அத்துடன் தான் முழுவதுமாக தீய பழக்க வழக்கங்களில் இருந்து வெளியே வந்து உடற்பயிற்சி மீது கவனம் செலுத்தி வருவதாகவும் பேசி இருந்தார். இதனிடையே அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்களைப் பற்றி பேசியது சர்ச்சையை உண்டாக்கியது. தற்போது பட வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இதனிடையே வெளியூர்களில் நடக்கும் விழாக்களில் பங்கு பெற்று மக்களை மகிழ்வித்து வரும் அவர் இன்று மதுரையில் நடந்து கொண்டிருக்கும் அதிமுக எழுச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் பாவமாக ட்ரம்ஸ் அடிப்பது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. அங்கு நடைபெற்று வரும் பட்டிமன்றத்திலும் தனக்கே உரித்தான பாணியில் காமெடிகள் செய்து மகிழ்வித்தார்.
டாபிக்ஸ்