தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajini: வீடு விஷயத்தில் கோர்ட் கொடுத் தீர்ப்பு.. அதிர்ச்சியான சிங்கமுத்து

Rajini: வீடு விஷயத்தில் கோர்ட் கொடுத் தீர்ப்பு.. அதிர்ச்சியான சிங்கமுத்து

Aarthi V HT Tamil
Feb 22, 2023 12:54 PM IST

ரஜினி சீரியலில் என்ன நடக்க போகிறது என பார்க்கலாம்.

ரஜினி
ரஜினி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் கடந்த வாரம் சிங்கமுத்து பத்மாவை பகடை காயாக வைத்து வீட்டை விற்க ரஜினியிடம் இருவரும் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினாள்.

இதையடுத்து வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது, ரஜினியின் சித்தப்பா வீட்டுக்கு வர ரஜினி நீங்கள் இனி இந்த வீட்டுக்கு வர கூடாது என சொல்ல சித்தப்பா இந்த வீடு என்னுடையது என ரஜினி கையெழுத்து போட்ட பத்திரத்தை எடுத்து காட்ட ரஜினி அதிர்ச்சி அடைகிறாள்.

அடுத்து இன்னைக்கு 6 மணிக்குள் நீங்க இந்த வீட்டை விட்டு வெளியே போகணும் என சிங்கமுத்து கெடு வைக்க எல்லோரும் வீட்டை விட்டு வெளியே போக அப்போது சிங்கமுத்து வீட்டை இடிக்க ப்ளூடோசர் வண்டியை கொண்டு வர அப்போது அரசு அதிகாரி ஒருவர் வந்து ஸ்டே ஆர்டர் வாங்கி இருப்பதாக சொல்கிறார்.

பிறகு கோர்ட்டில் கேஸ் விசாரணைக்கு வர வீட்டின் மூன்று மருமகன்கள் ஒன்று சேர்ந்து ஸ்டே ஆர்டர் வாங்கி இருப்பதாக தெரிய வருகிறது. கேஸ் முடியும் வரை வீட்டில் உங்களுக்கு உரிமை இல்லை என சிங்கமுத்துவுக்கு உத்தரவு போடப்பட ரஜினியின் குடும்பம் மீண்டும் வீட்டுக்கு வருகிறது.

இதனையடுத்து சிங்கமுத்துவிடம் பணத்தை வாங்கியவர்கள் ஒரு பக்கம் மருமகன்கள் மற்றும் ரஜினி மறுபக்கம் என வீடு இரண்டாக பிரிகிறது. சிங்கமுத்து தான் கொடுத்த பணத்தை மீண்டும் திருப்பி கேட்க பணம் வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே ரஜினி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்