DMK ON PTR: ஆடியோ விவகாரம் எதிரொலி? திமுக சாதனை விளக்க பேச்சாளர் பட்டியலில் பிடிஆர் பெயர் நீக்கம்!
சாதனை விளக்க பொதுக்கூட்ட பேச்சாளர் பட்டியலில் இருந்து பிடிஆர் பெயர் நீக்கப்பட்டுள்ளது
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்று நேற்றுடன் (08-05-2023) இரண்டு ஆண்டுகள் முடிவடைந்தது. முதல் வருடத்தை விட இரண்டாவது வருடத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது திமுக. அதில் ஒன்று பிடிஆரின் ஆடியோ விவகாரம்.
ட்ரெண்டிங் செய்திகள்
அந்த பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோவில் முதல்வரின் மருமகன் சபரீசனும், உதயநிதி ஸ்டாலினும் கிட்டத்தட்ட முப்பதாயிரம் கோடியை கொள்ளையடித்து விட்டதாக பதிவாகி இருந்தது. இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அதற்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட பிடிஆர் ஆடியோவில் பேசியது நான் இல்லை என்றும் சப்ரீசன் எனக்கு வழிகாட்டி, உதயநிதி என்னுடைய நண்பர் என்று பேசியிருந்தார். இந்த விவகாரம் குறித்து உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியலில் ஈடுபடும் நபர்களுக்கு பதில்தந்து விளம்பரம் தேடி தர விரும்பவில்லை. மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது என்று பேசினார். இதனிடையே திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக தலைமை உத்தரவிட்டது.
இதற்காக குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி, அந்த நாட்களில் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும், அதில் சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அதற்கான பட்டியலை முரசொலி நாளிதழில் கடந்த மே 3 ம் தேதி வெளியிட்டது திமுக. இந்நிலையில் மதுரை சிம்மக்கல் பகுதியில் நடப்பதாக இருந்த பொதுக்கூட்டத்தில் இருந்து பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஏ.ஜெயரஞ்சன் பெயர் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்ட பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து பிடிஆர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான முதல் பட்டியலில் பிடிஆர் பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்