Peranbu: வானதியை தேடி வந்த அம்மா.. ராஜேஸ்வரி குடும்பத்துக்கு வந்த புது சிக்கல்!
பேரன்பு சீரியல் இன்றைய அப்டேட் குறித்து இதில் காண்போம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பேரன்பு. இந்த சீரியலில் கார்த்திக், வானதிக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் அமுதா இவர்களை சேர விடாமல் செய்ய திட்டமிட்டாள். இப்படியான நிலையில் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
அதாவது, அமுதா ராஜேஸ்வரியிடம், கார்த்திக் வானதி சாந்தி முகூர்த்தத்தை சாமியார் தள்ளி வைக்கச் சொல்லியிருப்பதாக அவரது சீடர் வந்து சொன்னதை சொல்கிறாள். அமுதா சொல்வதை நம்பும் ராஜேஸ்வரி, தான் பாம்பே சென்று வரும்வரை, அவர்களை கவனமாக பார்த்துக்கொள் என சொல்லி விட்டுப் போகிறாள்.
ஆனால் சாமிக்கண்ணு அமுதாவை ஏமாற்றி, கார்த்திக், வானதியை சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைகிறது. அடுத்து ராஜேஸ்வரி பாம்பேவில் இருந்து வந்ததும் வானதிக்கு தெரியாமலே அவரது பிறந்த நாளை ராஜேஸ்வரி குடும்பத்தார் சிறப்பாக ஏற்பாடு செய்து வானதிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கின்றனர்.
ராஜேஸ்வரியின் செயலால் வானதி நெகிழ்ச்சியாகிறாள். இப்படியான நிலையில் வானதி பிறந்த நாளில் வசுந்தரா தேவி என்ற கேரக்டர் அறிமுகமாகிறாள். அவள் தன்னை வானதியின் அம்மா என சொல்ல அனைவரும் இன்ப அதிர்ச்சியாகின்றனர்.
முதலில் வானதியும் சந்தோஷப்படுகிறாள். ஆனால் ராஜேஸ்வரி குடும்பத்தாரை அவமதிக்கும் வகையில் வசுந்தராவின் செயல்பாடுகள் இருப்பதால், என்ன செய்வதென தெரியாமல் வானதி கலங்கி நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே பேரன்பு சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்