Pathu thala: ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்த பத்து தல.. எந்த ஓடிடியில்? எப்போது?
பத்து தல திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது.
இயக்குநர் ஓபேலி என். கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படம் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் திரையரங்குகளில் வெளியானது.
ட்ரெண்டிங் செய்திகள்
நேர்மறையான விமர்சனங்களுடன் வெளியான இப்படன் ஃபாக்ஸ் ஆபிஸில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.
இந்நிலையில் திரையரங்கை தொடர்ந்து பத்து தல திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இந்த தகவலை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்த படம் உலகம் முழுவதும் 55 கோடி வசூல் செய்து மாஸ் கிளப்பி உள்ளது.
கன்னடத்தில் வெற்றி பெற்ற 'முஃப்தி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தழுவலாக பத்து தல வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்காக சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. முதல்வர் (சந்தோஷ் பிரதாப்) மர்மமான முறையில் காணாமல் போனது தொடர்பான விசாரணையை மையமாக கொண்டு படம் வெளியானது.
சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் கலையரசன், சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
'மாநாடு' மற்றும் 'வென்று தனித்து காடு' ஆகிய பிளாக் பஸ்டர் படங்களைத் தொடர்ந்து 'பத்து தலை' மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார். சிம்பு தனது உடல்நிலை மாற்றத்திற்குப் பிறகு தனது இடத்தைத் திரும்பப் பெறுவதற்காக வலுவான மறுபிரவேசம் செய்துள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம். மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
டாபிக்ஸ்