டாப் 10 சினிமா.. கதாநாயகனான கூல் சுரேஷ் முதல்.. பல மொழிகளில் பேசும் சூர்யா வரை.. கோலிவுட்டின் முக்கிய செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  டாப் 10 சினிமா.. கதாநாயகனான கூல் சுரேஷ் முதல்.. பல மொழிகளில் பேசும் சூர்யா வரை.. கோலிவுட்டின் முக்கிய செய்திகள்

டாப் 10 சினிமா.. கதாநாயகனான கூல் சுரேஷ் முதல்.. பல மொழிகளில் பேசும் சூர்யா வரை.. கோலிவுட்டின் முக்கிய செய்திகள்

Malavica Natarajan HT Tamil
Published Oct 14, 2024 05:48 PM IST

கோலிவுட் சினிமாவில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இந்த செய்தியில் கதாநாயகனான கூல் சுரேஷ் முதல்.. பல மொழிகளில் பேசும் சூர்யா வரை பல சுவாரசியமான செய்திகள் இடம்பெற்றுள்ளது.

டாப் 10 சினிமா.. கதாநாயகனான கூல் சுரேஷ் முதல்.. பல மொழிகளில் பேசும் சூர்யா வரை.. கோலிவுட்டின் முக்கிய செய்திகள்
டாப் 10 சினிமா.. கதாநாயகனான கூல் சுரேஷ் முதல்.. பல மொழிகளில் பேசும் சூர்யா வரை.. கோலிவுட்டின் முக்கிய செய்திகள்

2. பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அப்படத்தின் இயக்குநர் செல் அம் இன்று புதிய கதாநாயகனை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி, சர்ச்சைகளால், தனது வித்தியாசமான செய்கையாலும் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் கூல் சுரேஷ் மஞ்சள் வீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது தெரியவந்துள்ளது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிகிறது.

3. வரலாற்றுப் பின்னணியில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கிய இந்தப் படம் வரும் நவம்பர் 14ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், கங்குவா திரைப்படத்தின் பிறமொழி பதிப்பிற்கு சூர்யாவின் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ம் தேதி சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

4. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி பின் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர் இந்திய சினிமாவில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த சமயத்தில் தான் நட்சத்திர விடுதியில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரின் நடிப்புத் திறமையை பார்ட்டி விருதுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் மும்பை மாநகராட்சி, ஸ்ரீதேவி வாழ்ந்த இடத்தின் சாலைக்கு அவரது பெயரை சூட்டி பெருமைப்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவி கபூர் சௌக் எனப் பெயரிடப்பட்ட அந்த சாலையின் பெயர் திறப்பு விழாவில் அவரது கணவர் மற்றும் மகள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தேவாரா 1 படத்தின் மூலம் தென்னிந்த திரையுலகில் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

5. கிரிக்கெட்டை மையமாக வைத்து தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. கிரிக்கெட், குடும்பம், காதல் பின்னணியில் உருவான லப்பர் பந்து திரைப்படத்தில், அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யான், சுவாசிகா, சஞ்சனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கிராமத்து கதைக்களத்தை மையமாக உருவாக்கப்பட்ட இந்தப் படம் மக்களின் வாழ்க்கை முறையோடு ஒன்றிப்போய் இருந்ததால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டை பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனை படக்குழு கொண்டாடி வந்த நிலையில், 25ம் நாளுக்கான போஸ்டரை வெளியிட்டுள்ளது.

6. நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ வெளியாகி பேசுபொருளான நிலையில், இதுகுறித்து அவர் திரிச்சூர் போலீசில் புகார் அளித்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. தாரிக் என்ற நபருடன் ஓவியா நட்பில் இருந்ததாகவும் அவரின் செயல்கள் பிடிக்காததால், அவர் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ வெளியிட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையிஸ், இவ்விவகாரம் குறித்து 2 நாட்களுக்குப் பின் ஓவியா புகரளித்துள்ளதால், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

7. தெலுங்கு திரைப்பட இயக்குநர் சேகர் கம்முல்லா இயக்கி வரும் குபேரா திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வந்தார். இந்தப் படத்தில் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள குபேரா வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸாகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

8. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து நடைபெற்று வந்த வழக்கிலிருந்து அவரது கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சித்ராவின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலமுறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஹேம்நாத் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9.தமிழில் வெளியாகும் புது திரைப்படங்களை சிலர் திருட்டுத் தனமாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு வந்த வண்ணமே இருந்தனர். இந்நிலையில், நடிகர் ரஜினி காந்த்தின் வேட்டையன் திரைப்படத்தை போர்வைக்குள் கேமரா வைத்து பதிவு செய்து வெளியிட்டதாக ஐடி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு படத்தை பதிவிடுவதால் சுமார் 40 ரூபாய் முதல் வருமானம் வரும் என தகவலளித்துள்ளனர்.

10. முன்னாள் மனைவி மற்றும் மகளுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாக சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலாவை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக, பாலா தனது மகளை பற்றி பல இடங்களில் பேசி வந்த நிலையில், அவரது மகள் அவருக்கு பதிலடி கொடுத்து வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். இந்நிலையில், பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.