“மகளை என்னையும் வழிமறித்து டார்ச்சர் செய்து”.. முன்னாள் மனைவி கொடுத்த புகார்! - சிறுத்தை சிவா தம்பி பாலா கைது!
முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், சிறுத்தை சிவா தம்பியும், நடிகருமான பாலாவை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.

“மகளை என்னையும் வழிமறித்து டார்ச்சர் செய்து”.. முன்னாள் மனைவி கொடுத்த புகார்! - சிறுத்தை சிவா தம்பி பாலா கைது!
பிரபல நடிகரும், இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியுமான நடிகர் பாலா கைது செய்யப்பட்டு இருக்கிறார். பாலாவின் முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கடவந்திரா காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது.
பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா அளித்த புகாரில், “ பாலா என்னையும், என்னுடைய மகளையும் வழிமறித்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார். ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனையடுத்து கடவந்திரா காவல்துறை, எடப்பள்ளியில் உள்ள பாலாவின் வீட்டில் வைத்து அவரை கைது செய்திருக்கின்றனர். போலீசார் தரப்பில் அவரை இன்றைய தினம் மாலை நீதிமன்ற காவலில் ஆஜர் படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.