தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Varalaxmi: 'ஹெராயின், துப்பாக்கி பறிமுதல்' நடிகை வரலட்சுமிக்கு Nia நோட்டீஸ்!

Varalaxmi: 'ஹெராயின், துப்பாக்கி பறிமுதல்' நடிகை வரலட்சுமிக்கு NIA நோட்டீஸ்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 29, 2023 12:53 PM IST

போதை பொருள்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகை வரலட்சுமியின் உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

போதை பொருள் கடத்தல் வழக்கில் உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில் நடிகை வரலட்சுமி விசாரணைக்கு ஆஜராக என்ஐஏ நோட்டீஸ் வழங்கியுள்ளது.
போதை பொருள் கடத்தல் வழக்கில் உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில் நடிகை வரலட்சுமி விசாரணைக்கு ஆஜராக என்ஐஏ நோட்டீஸ் வழங்கியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நடிகை வரலட்சுமி விசாரணைக்கு ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள், வெளிநாட்டவர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் போதை பொருள்கள், ஆயுதங்கள் கடத்தலில் தொடர்புள்ளவர்களாக இருந்து வருகின்றனர்.

போதை பொருள்கள் கடத்தல் தொடர்பான ஈழத்தை சேர்ந்த குணா, புஷ்பராஜ், அஸ்மின் உள்ளிட்ட 13 பேர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்தனர். அ்வர்களிடம் நடத்திய விசாரணையில் கேரளாவில் நடந்திருக்கும் போதை பொருள்கள், ஆயுதங்கள் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான குணா என்பவரின் கூட்டாளியாக இருந்து வரும் ஆதிலிங்கம் என்கிற லிங்கம் கடந்த சில நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து லிங்கம், நடிகை வரலட்சுமியின் உதவியாளராக இருப்பதும், போதை பொருள்கள், ஆயுத கடத்தலால் கிடைத்த பணத்தை அவர் சினிமாவில் முதலீடு செய்திருக்கலாம் என சந்தேகித்துள்ள என்ஐஏ அதிகாரிகள் வரலட்சுமியிடன் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், கைதாகியிருக்கும் லிங்கத்துக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என வரலட்சுமி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதாகியிருப்பவர் வரலட்சுமியிடம் 5 ஆண்டுகளுக்கு முன்னர் வேலை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்