Nandhan Director: அந்த உரிமை உங்களுக்கு இல்லை.. இன்றும் ஏங்குகிறேன்.. மனதில் இருப்பதை கூறிய டைரக்டர்
Nandhan Director: நந்தன் திரைப்படம் வெளியான பின் பலரும் திரைப்படத்தை பாராட்டி பேசி இருந்தாலும் நான் இவரின் கருத்துக்காக காத்திருந்தேன். இந்த படைப்பையே அவருக்காகத் தான் உருவாக்கி இருந்தேன் என இயக்குநர் இரா.சரவணன் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் பலரும் படித்து முன்னேறி சமூக பாகுபாடுகளை கடந்து வருகின்றனர். ஆனால், ஒருபுறம் எத்தனை நாகரிக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இன்னமும் சிந்தனையிலும் ரத்தத்திலும் சாதிய பாகுபாடுகள் ஊறிப்போய் உள்ளனர். அவர்கள் அனைத்து மனிதர்களையும் சமமாக பார்க்க பழகுவதே இல்லை. அத்துடன் வரும் தலைமுறையினரையும் பழக விடுவதில்லை. இந்தக் கருத்தை மையமாக வைத்து வெளியான திரைப்படம் நந்தன்.
என்ன சொல்கிறது நந்தன்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து வெளியான திரைப்படம் நந்தன். இந்த படத்தில் அம்பேத்ராஜாக வரும் சசிகுமார் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவராக நடித்துள்ளார். இவர் தன்னை பணி செய்ய விடாமல் தடுக்கும் ஆதிக்க வர்க்கத்திற்கு பதிலடி அளித்தாரா? அவரது மக்களின் உரிமைகளை மீட்டாரா என்பதே மையக்கரு.
இந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின் இயக்குநரான இரா.சரவணன், நடிகர் சசிகுமாரை அடித்து துன்புறுத்தியுள்ளார். அவர் பார்த்த சாதிக் கொடுமைகளையும், வன்முறைகளையும், அடக்குமுறைகளையும் உண்மையாக திரையில் காட்ட எண்ணி, இவ்வாறு செய்ததாகவும இதனால், முதுகு கிழிந்து, காய்ச்சலில் நடுங்கியுள்ளாராம் சசிகுமார். ஆனால், அவர் அப்போதும் சூட்டிங்கில் நடித்து கொடுத்துள்ளாராம்.