James Vasanthan: பாட்டில் மெல்லிசை.. கருத்தில் பூகம்பம்.. கோலிவுட்டின் வெளிச்சத்திற்கு வராதா டி.ஆர்.! யார் இவர்?
James Vasanthan: கோலிவுட்டில், நடிகர், இயக்குநர், கதை ஆசிரியர், இசையமப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட டி.ராஜேந்திரன் போன்ற நபர் அதிக புகழ் வெளிச்சத்திற்கு வரமாலே போயுள்ளார். அவரைப் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

James Vasanthan: பாட்டில் மெல்லிசை.. கருத்தில் பூகம்பம்.. கோலிவுட்டின் வெளிச்சத்திற்கு வராதா டி.ஆர்.! யார் இவர்?
கோலிவுட்டின் இன்றைய சூழலில் ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்கினால் மட்டும் ஒருவருக்கு வாய்ப்புகள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அதேசமயம், சினிமாவில் நிலைத்து நிற்க ஒருவர் அவரது பன்முகத் தன்மையை நிரூபிக்க வேண்டி இருக்கிறது.
அப்படி, தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் டி.ராஜேந்திரன் காரணம் ஒரு படத்திற்கு அவரே கதாநாயகன், அவரே இயக்குவர், அவரே, வசனம், அவரே கதை ஆசிரியர், அவரே இசையும் அமைப்பார் என்றால் எப்படித்தான் அவரைப் பற்றி தெரியாமல் இருக்கும். சினிமாவில் தனது பன்முகத் தன்மையால் இன்று நிரூபிப்பவர்கள் எல்லாமே டி.ஆரின் பெயரால் குறிப்பிடப்படுபவர்கள் தான்.
அப்படி, டி.ஆருக்கு இணையாக பன்முகத் தன்மை கொண்டிருந்தும் பெரிதாக கண்டுகொள்ளப் படாதவர் தான் ஜேம்ஸ் வசந்தன்.
