James Vasanthan: ‘நான் இசையிலிருந்து திசை மாறியது உண்மை தான்..’ உடைத்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  James Vasanthan: ‘நான் இசையிலிருந்து திசை மாறியது உண்மை தான்..’ உடைத்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்!

James Vasanthan: ‘நான் இசையிலிருந்து திசை மாறியது உண்மை தான்..’ உடைத்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published May 08, 2023 06:00 AM IST

‘சுப்பிரமணியபுரம் பாடல்கள், பசங்க பாடல்கள் ஹிட் ஆன போது. புராஜக்ட்டை கொஞ்சம் அவசரப்படாமல் பண்ணுங்க சார் என சசிக்குமார் என்னிடம் கூறிக்கொண்டே இருந்தான்’

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்  -கோப்புபடம்
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் -கோப்புபடம் (james_vasanthan)

‘‘கோவிட் நேரத்தில் நிறைய நேரம் இருந்ததால் பல வேலைகளை பலரும் செய்தார்கள். அப்படி தான் நானும் பல வேலைகளை செய்தேன். இருந்தும் நேரம் அதிகம் இருந்தது. என்னுடைய உதவியாளர்களுக்கு எல்லாம் நான் தான் முடி திருத்தம் செய்தேன். அப்படியும் நேரம் போகவில்லை. கண்ணாடியில் பார்த்த போது முகத்தில் மீசை இருந்தது, நேரம் போகாமல் அதை எடுத்தேன். கடைசியில் அதையே வழக்கமாக்கிவிட்டேன்.

மீசையை எடுத்த நாளிலிருந்து என் மனைவிக்கும் எனக்கு பயங்கர சண்டை. நண்பர்கள் தரப்பிலும் ‘தயவு செய்து மீசை வை’ என்று கூறிவிட்டார்கள். ஆனாலும் நான் மீசை இல்லாமல் தொடர்கிறேன்.  

என்னுடைய அடையாளம் இசையாக தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வேறு அடையாளம் வேண்டாம்.  பள்ளி பருவத்திலிருந்தே என் ஆசையும் அது தான். கூச்சம் காரணமாக வாய்ப்பு கேட்காமல் இருந்தேன். அதற்கு இடையில் தான் தொகுப்பாளராக பணியாற்றினேன். என்றோ தொடங்கிய பயணம், ஒரு நாள் அதுவும் நிகழ்ந்தது. 

நான் இசையை கடந்து வேறு விவகாரங்களில் திசை திரும்பிவிட்டேனோ என்று, என் மீது அக்கறை உள்ள பலரும் என் மீது கோபப்படுகிறார்கள். அது அன்பின் வெளிப்பாடு தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அது உண்மை, முழுமனதா அதை ஏற்றுக்கொள்கிறேன். இது தான் எனக்கு தெரிந்தது, இது தான் என் தொழில் என நான் நினைத்தால் இப்படியே இருந்து விடலாம். எனக்கு பலமுயற்சிகளை மேற்கொள்ளும் ஆசை மனதிற்குள் இருப்பதால், அதை என்னால் செய்யாமல் இருக்க முடியவில்லை.

சுப்பிரமணியபுரம் பாடல்கள், பசங்க பாடல்கள் ஹிட் ஆன போது. புராஜக்ட்டை கொஞ்சம் அவசரப்படாமல் பண்ணுங்க சார் என சசிக்குமார் என்னிடம் கூறிக்கொண்டே இருந்தான். நான் தான் கேட்கவில்லை. நிறைய பேர் என்னிடம் வந்து, ‘எனக்கு லைஃப் சார் இது.. நீங்க மியூசிக் பண்ணா தான்..’ என்று கூறினார்கள். இப்படி இரக்கப்பட்டே 9 படங்களுக்கு மேல் பண்ணேன். சில படங்கள் வரவில்லை, வெளி வந்த படங்களும் கவனம் பெறாமல் போனது.

உதவியா பண்ணப் போன பல படங்களில் ஊதியம் கூட வரவில்லை. உப்புமா கம்பெனிகளிடம் மாட்டிவிட்டேன். சரியில்லாத படங்களில் கமிட் ஆகி விணடித்துவிட்டேன். இன்று பாடல்களில் பாடல் வரிகள் அழுத்தமாக இல்லை. அப்படிப்பட்டி இயக்குனர்கள், கவிஞர்கள் இப்போது இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. இப்போது வரும் இயக்குனர் வரும் போதே 3 பாடல்களை எழுதிக் கொண்டு வருகிறார்கள். இன்னும் சில இயக்குனர்கள் டியூன் உடன் வருகிறார்கள். 

நான் இசை கற்றுக்கொள்ள ஒரு குருவிடம் போகிறேன். அவர் ஒரு பெரிய ஞானியாக எனக்கு சொல்லிக் கொடுப்பவர், நான் அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆனால், அதே குரு வகுப்பு முடிந்த பின், தெருவில் நின்று கெட்ட வார்த்தை பேசி, வேட்டி அவிழ நிற்பது, பொண்டாட்டியை போட்டு அடித்தால் என் குரு என்பதற்காக அவர் செய்வதை சரி என்று நான் கூற முடியுமா? அது சரியாகாது. எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும், பொறுப்போடு இல்லை என்றாலும் அது தவறு என்றால், தவறு என்று எல்லாரும் சொல்ல வேண்டும். அப்படி தான் இளையராஜாவின் தவறுகளை நான் கூறுகிறேன். 

இளையராஜாவின் கர்வம் மீது எனக்கு பிரச்னை இல்லை. சிலர் கர்வமாக தான் இருப்பார்கள், அதில் தவறில்லை. சமூகத்தை அது பாதிக்கும் போது தான் அதை நான் விமர்சிக்கிறேன்,’’

என்று அந்த பேட்டியில் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.