Marimuthu Son: ஜோதிடம் சாபத்தால் மாரிமுத்து இறந்தாரா? - ஓபனாக பேசிய மகன்
நடிகர் மாரிமுத்துவின் மகன் தனது தந்தையின் மரணத்திற்கு ஜோதிடர்கள் காரணமில்லை என கூறி உள்ளார்.
தேனி மாவட்டம் வருஷநாடு அருகே உள்ள பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (57). எதிர்நீச்சல் தொடர் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் அவரின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
முன்னதாக தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாரிமுத்து பேசுகையில், "இந்தியா இப்படி ஒரு குழப்பம் அடைந்ததற்கு காரணம் ஜோதிடர்களும், ஜோதிடத்தை நம்புபவர்களும் தான்" என்றார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிடர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் பின்னர் நிகழ்ச்சியில், உணர்வுபூர்வமாக அவ்வாறு செய்ததற்காக மாரிமுத்து மன்னிப்பு கேட்டார்.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஜோதிடரின் சாபத்தால் மாரிமுத்துவின் திடீர் மரணம் என்று தற்போது சிலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் மகன் தனது தந்தையின் தகனம் முடிந்து முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்து விட்டுப் போயிருக்கிறார் என் அப்பா. எந்த வேலையிலும் நம்மை முற்போக்காகச் செய்யச் சொல்வார்.
மூட நம்பிக்கைகளை ஏற்கக் கூடாது என எப்போதும் சொல்லி கொண்டே இருப்பார். அவரது கனவுகள், ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். அவர் சொல்லி கொடுத்த அனைத்தையும் கடைப்பிடிப்போம்.
அதேபோல் என் தந்தையின் மரணத்திற்கு ஜோதிடர்கள் சாபமே காரணம் என்று கூறுவது மூடநம்பிக்கை. அதையும் நம்ப மாட்டோம் " என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்