Vishal: ‘சக்ரா’ பட விவகாரம்; முடிவுக்கு வந்த பஞ்சாயத்து; விஷாலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
‘சக்ரா’ திரைப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
நடிகர் விஷால் - தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்பட‘ஆக்ஷன்’. இந்தப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பில் ரவீந்திரன் தயாரித்திருந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
படம் தோல்வியடைந்ததையடுத்து அவருக்கு நஷ்ட ஈடாக 8.29 கோடியை திருப்பி தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த நிலையில் அவர் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததாக கூறப்பட்டது.
இதற்கிடையே இயக்குநர் ஆனந்தன் என்பவர் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் ஒரு கதையைச் சொல்லி அதை படமாக்க ஒப்பந்தமும் செய்தார்.
இந்த நிலையில்தான் இயக்குநர் ஆனந்தன் இயக்கி இருந்த சக்ரா படத்தின் டீசர் வெளியானது. இதனையடுத்து தங்கள் நிறுவனத்தில் சொன்ன கதையைத்தான் இயக்குநர் ஆனந்தன் நடிகர் விஷாலை வைத்து ‘சக்ரா’ என்ற பெயரில் எடுத்துள்ளதாக கூறி அந்தப்படத்திற்கு தடை விதிப்பதோடு 8.29 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும் ரவீந்திரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்தப்படம் வெளியானாலும், வழக்கு தொடர்பான விசாரணை நடந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் ரவீந்திரன் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
வழக்கின் தீர்ப்பை எண்ணி மகிழ்ந்த நடிகர் விஷால் நீதிமன்றத்திற்கும், நீதிபதி அவர்களுக்கும், எப்போதும் துணை நிற்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பகர்களுக்கும் நன்றியினை தெரிவித்து இருக்கிறார்.
டாபிக்ஸ்