Madhya Pradesh: திடீரென பாலத்தில் இருந்து கவிழ்ந்த பேருந்து; 15 பேர் பரிதாப பலி! - நடந்தது என்ன?
மத்தியபிரதேசத்தில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில் இந்தூர் நோக்கி பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தது. அங்கிருந்த பாலம் ஒன்றின் மீது பேருந்து சென்ற போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் விபத்துக்குள்ளான பேருந்து பாலத்தில் இருந்து விழுந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
பேருந்து விபத்துக்குள்ளானதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை அருகில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். எதிர்பாரத விதமாக நடந்த இந்த கோர விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் சிவ்ராஜ் சிங் வர்மா நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது நடைபெற்று வருவதாக கார்கோன் மாவட்ட எஸ்.பி தரம் வீர் சிங் தெரிவித்து இருக்கிறார். பேருந்தில் கிட்டத்தட்ட 50 பயணிகள் வரை பயணித்ததாகத்தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மத்திய பிரதேச அரசு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சத்தை நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளது. அதே படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், லேசாக காயம் அடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டு இருக்கிறது.
டாபிக்ஸ்