தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Madhya Pradesh: திடீரென பாலத்தில் இருந்து கவிழ்ந்த பேருந்து; 15 பேர் பரிதாப பலி! - நடந்தது என்ன?

Madhya Pradesh: திடீரென பாலத்தில் இருந்து கவிழ்ந்த பேருந்து; 15 பேர் பரிதாப பலி! - நடந்தது என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
May 09, 2023 11:14 AM IST

மத்தியபிரதேசத்தில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

Madhya Pradesh
Madhya Pradesh

ட்ரெண்டிங் செய்திகள்

பேருந்து விபத்துக்குள்ளானதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை அருகில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். எதிர்பாரத விதமாக நடந்த இந்த கோர விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் சிவ்ராஜ் சிங் வர்மா நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். 

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது நடைபெற்று வருவதாக கார்கோன் மாவட்ட எஸ்.பி தரம் வீர் சிங் தெரிவித்து இருக்கிறார். பேருந்தில் கிட்டத்தட்ட 50 பயணிகள் வரை பயணித்ததாகத்தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மத்திய பிரதேச அரசு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சத்தை நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளது. அதே படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், லேசாக காயம் அடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டு இருக்கிறது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்