Vishal: அரசியலுக்கு வருவேன் என்றால் இதுதான் கதியா?..விஷாலுக்கு ஆதரவு குரல் கொடுத்த ஜெயக்குமார்
Jayakumar: 'ரத்னம்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் கட்டப்பஞ்சாயத்து செய்து வெளியிட விடாமல் ஏன் தடுக்க வேண்டும்? அரசியலுக்கு வருவேன் என்றால் இதுதான் கதியா? என விஷாலுக்கு ஆதரவு குரல் கொடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகர் விஷால், ரத்னம் படத்திற்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து நடந்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இது தொடர்பாக விஷால் தனது எக்ஸ் தளத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார். அதில், “ இறுதியாக கட்டப்பஞ்சாயத்து எந்த பயமோ, வருத்தமோ இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு, தியேட்டர் அசோசியேஷனின் அன்பான செயற்குழு உறுப்பினர்களே, கங்காரு நீதிமன்றங்கள் இன்னும் இருக்கிறது மற்றும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.
ஆனால் என்னைப் போன்ற ஒரு போராளிக்கு முன்பு இது எல்லாம் ஒன்றும் கிடையாது. சற்று தாமதமானாலும் நிச்சயம் உங்களை நீதியின் மூலம் வீழ்த்துவேன். எல்லா தயாரிப்பாளர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்று எண்ணும் நபர் நான்.
அவர்கள் திரைப்படங்களை பொழுதுபோக்காக எடுப்பதற்காக அல்ல என்றும் நான் நம்புகிறேன். பல்வேறு பிரிவுகளின் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நன்றி, நீங்கள் தயாரிப்பாளர்களுக்காக பல சங்கங்கள் வைத்திப்பது என இருக்கிறது என்று கடவுள் அறிந்திருக்கிறார். இது உங்கள் அனைவருக்கும் தான் அவமானம்.
பொதுச் செயலாளராகவோ அல்லது ஒரு நடிகராகவோ அல்லது தயாரிப்பாளராகவோ அல்ல. ஆனால் இது முன்னாள் தயாரிப்பாளராக தன் குழந்தையை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல வியாழன் மாலை என்ன நடந்தது என எனக்கு நன்கு தெரியும் “ என காட்டமாக பதிவிட்டு இருக்கிறார். இதற்கு முன்னதாக நேற்று ( ஏப்ரல் 25) ரத்னம் படத்தை வெளியீட சதி நடந்து வருகிறது என பேசி ஆடியோ வெளியீட்டு இருந்தார்.
இந்நிலையில் விஷாலுக்கு ஆதரவு குரல் கொடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.
அதில், “ சில தினங்களில் நடிகர் விஷால் அவர்களின் 'ரத்னம்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் கட்டப்பஞ்சாயத்து செய்து வெளியிட விடாமல் ஏன் தடுக்க வேண்டும்?
அரசியலுக்கு வருவேன் என்றால் இதுதான் கதியா?
இதுபோன்ற நெருக்கடிகளால் தமிழ் சினிமா மெல்ல மெல்ல தன் இயல்பை இழந்து வருகிறது!
இன்று விஷால் படத்திற்கு என்றால் நாளை தம்பி விஜய் படத்திற்கும் இது தான்!
தமிழ் சினிமாவிற்கும் இது தான்!
அந்த ஒருவர் நினைக்கும் படம் மட்டும் தான் தமிழ் சினிமாவில் திரையிடப்பட வேண்டும் என்று அதிகார திமிரில் ஆடுகின்றனர் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.
ஆக்ஷன் ஹீரோ விஷால், மாஸ் டைரக்டர் ஹரி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'ரத்னம்'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'ரத்னம்'. இந்த படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம். பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்