Hiphop Adhi: அதிக படங்களில் நடிக்காததற்கு காரணம் என்ன? - ஹிப்ஹாப் ஆதி விளக்கம்
நடிகர் ஹிப்ஹாப் ஆதி தான் ஏன் அதிகமாக படங்களில் நடிப்பது இல்லை என கூறினார்.
இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
படத்தின் விளம்பர பணி தற்போது நடந்து வருகிறது. சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் ஹிப்ஹாப் ஆதி தான் ஏன் அதிகமாக படங்களில் நடிப்பது இல்லை என கூறினார்.
அவர் கூறுகையில், “பலரும் என்னை பார்க்கும் போது நான் ஏன் அதிக படங்களில் நடிக்கவில்லை என காரணம் கேட்கின்றனர். அது அனைத்திற்குமே ஒரு காரணம் உள்ளது.
ஒரு படத்தில் ஒப்பந்தமான பிறகு அதன் கதாபாத்திரத்துக்காக நிறைய மெனகெடுவேன். இசையமைக்கும் வேலையும் இருக்கும். நட்பே துணை படத்துக்காக விளையாட்டு முறையாக கற்றுக்கொண்டேன். வீரன் படத்தில் குதிரை இருப்பதால் குதிரை ஏற பயிற்சி எடுத்தேன். இரண்டு வருடம் கவுரவ டாக்டர் பட்டம் பெற படிக்கச் சென்றேன்.
இதனாலேயே அதிக படங்களில் நடிக்க முடியவில்லை. நான் தற்போது ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள வீரன் படம் உடலில் இருந்து மின் சக்தியை வெளிப்படுத்தும் மண் சார்ந்த சூப்பர் ஹீரோ கதை. குலசாமிகள் எல்லாமே சூப்பர் ஹீரோக்களாக இருந்தவர்கள் தான். ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் படத்தில் இருக்கும். வில்லனாக வினய் வருகிறார்'' என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்