Ethirneechal: மகள் பேச்சை கேட்டு வீட்டை விட்டு வெளியேறும் நந்தினி.. கண்டிஷன் போட்ட மாமியார்!
எதீர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
எதீர்நீச்சல் சீரியலில் நேற்று நந்தினி, சொன்ன நேரத்தில் சமையல் ஆர்டரை டெலிவரி செய்யவில்லை என்பதால் பெண் வீட்டிற்கு வந்து அவரை காசு வாங்கி கொண்டு ஏன் உணவு வழங்கவில்லை என கேட்டு சத்தம் போடுகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
உடனே கடுப்பான நந்தினி தான் அணிந்து இருந்த தாலியை கழட்ட வந்து, உங்களுக்கு அட்வான்ஸ் பணம் தானே வேண்டும், எடுத்து கொள்ளுங்கள் என சொல்கிறார். உடனே விசாலாட்சி, “ நிறுத்து டீ.. குத்துக்கல் மாதிரி உன் புருஷன் நிக்கிறான்.. தாலிய கழட்டற என சொல்ல உடனே நந்தினி, “அவங்க மரியாதை கொடுத்த தான் நாங்க மரியாதை கொடுப்போம்.. என்னை பொருத்தவரை இது செயின் மட்டும் தான் ” என்றார். கை கலப்புடன் நேற்றைய எபிசோட் முடிந்தது.
இந்நிலையில் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் நந்தினியின் மகள், “நீங்க இருந்து போயிடுங்க அம்மா.. நீங்க இல்லாத வீடு எப்படி இருக்குணு பார்க்கட்டும். ஜனனி சித்தி நீங்க தானே ஐடியா குடவுன், பட்டுனு முடிவு பண்ணி எல்லாரையும் தூக்குங்க” என சொன்னார்.
மறுபக்கம் விசாலாட்சி இனிமேல் இந்த வீட்டு பெண்கள் கால் எடுத்து வெளியே வைக்க மாட்டாங்க என சொல்ல உடனே ஈஸ்வரி, அது எல்லாத்தையும் நான் முடிவு பண்றேன் என திட்டவட்டமாக சொல்லிவிட்டார். கடந்த சில தினங்களாக குணசேகரன் இல்லை என்றாலும் எதீர்நீச்சல் சீரியல் காரசாரமாக சென்று கொண்டு இருக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்