Ethirneechal: சக்திக்கு தான் நகை.. அந்தர்பல்டி அடித்த விசாலாட்சி
எதிர்நீச்சல் தொடரின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் இவ்வளவு நாட்களாக சொத்து பிரச்னை நடந்து கொண்டு இருந்தது. இப்போது அந்த சுனாமி சற்று நகர்ந்து தொழில் விஷயத்திற்கு சென்று இருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
நீண்ட நாட்களாக ஜனனி ஒரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். ஆனால் ஆதி குரூப் ஆஃப் கம்பெனிக்கு எதிராக தொடங்கினால் என்ன நடக்கும் என்ற பயமும் இருக்கிறது.
ஒரு வழியாக அதை எல்லாம் தாண்டி சக்தி, ஜனனி புது தொழில் தொடங்க முடிவு செய்துவிட்டார்கள். என்ன தான் லோன் கிடைத்தாலும் முதலீடிற்கு பணம் வேண்டும் என்பதால் விசாலாட்சி தன் நகைகளை வைத்து மகனுக்கு பணம் கொடுக்கிறார்.
சும்மாவே ஆடும் குணசேகரனுக்கு இது சற்று பிடிக்கவில்லை. அதனால் வீட்டில் எப்போது போல் பஞ்சாயத்து வைத்துவிட்டார். உடனே சக்தியும், ஜனனியும் தங்களுக்கு கொடுத்த நகையை திருப்பி கொடுத்துவிட்டனர்.
இந்நிலையில் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், “விசாலாட்சி என்ன நடந்தாலும் சரி, என் நகை சக்திக்கு மட்டும் தான் என சொல்லி கொடுத்துவிட்டார். இதை அனைவரும் அதிர்ச்சியாக பார்க்கிறார்கள்.
மறுபக்கம் தர்ஷன், தர்ஷனி அவர் கட்டும் பணத்தில் நாங்கள் படிக்க மாட்டோம். அப்படி பட்ட படிப்பு தேவையில்லை என சொல்லி அடம்பிடித்து நிற்பது போல் ப்ரோமோ முடிந்தது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்