தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: குணசேகரனுக்கு தெரிய வந்த காதல் கதை.. ஈஸ்வரி நிலைமை என்ன?

Ethirneechal: குணசேகரனுக்கு தெரிய வந்த காதல் கதை.. ஈஸ்வரி நிலைமை என்ன?

Aarthi V HT Tamil
Sep 01, 2023 12:03 PM IST

எதிர்நீச்சல் தொடரின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

எதிர்நீச்சல்
எதிர்நீச்சல்

ட்ரெண்டிங் செய்திகள்

தன் கணவரால் தான் குழந்தை இப்படி நிற்கிறது என்பதை அறிந்து அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஜீவானந்தம் தன் மனைவியை கொலை செய்த யாராக இருந்தாலும் கொலை செய்துவிடுவேன் என சொல்லி முடித்தார். இதனால் பயந்து போன பெண்கள் கூட்டம், கதீர் தான் இதற்கு காரணம் என்பதை சொல்லவே இல்லை.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், ஈஸ்வரியின் தந்தை மகளை பார்க்க குணசேகரன் வீட்டிற்கு வருகிறார். அப்போது, ஜீவானந்தம், ஈஸ்வரியை மிகவும் பிடித்து இருக்கிறது என்றும் அவரை திருமணம் செய்து வைக்க கேட்டார் என்று உண்மையை உடைத்துவிட்டார்.

இதனால் உச்ச கோபத்திற்கு சென்ற குணசேகரன் வாசலில் என்ன செய்வது என தெரியாமல் அமர்ந்து கொண்டார். மறுபக்கம் ஈஸ்வரியும், ஜனனியும் வெளியே சென்றுவிட்டு காரில் வீடு திரும்புகின்றார். இந்த விஷயத்தை உடனே நந்தினி போன் செய்து ஈஸ்வரியிடம் சொல்லிவிட்டார்.

இந்த விஷயம் வெளியே தெரிந்ததால் எப்படியும் குணசேகரன், ஈஸ்வரியை தான் திட்டப்போகிறார். அதுமட்டுமில்லாமல் அவர்கள் சேர்ந்து சொத்தை அபகரித்துவிட்டார்கள் என சொல்ல வாய்ப்பு இருக்கிறது என பார்வையாளர்கள் யூகித்து உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்