தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal Serial: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் சக்தி.. கதறி அழுமம் ஜனனி..இனி என்ன நடக்குமோ?

Ethirneechal Serial: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் சக்தி.. கதறி அழுமம் ஜனனி..இனி என்ன நடக்குமோ?

Aarthi Balaji HT Tamil
Jan 29, 2024 12:26 PM IST

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

எதிர்நீச்சல்
எதிர்நீச்சல்

ட்ரெண்டிங் செய்திகள்

அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.

அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.

ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டிஆர்பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது.

இதனிடையே தற்போது எதிர்நீச்சல் சீரியலில்,  அந்த வீட்டு பெண் தர்ஷினியை யாரோ கடத்தி சென்றுவிட்டார்கள். அது தான் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய ( ஜனவரி 22 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. தர்ஷினியை கடத்தி சென்ற காரின் வீட்டை அட்ரஸை கண்டு பிடித்து அவர்களிடம் சக்தி சண்டை போடுகிறார்.

ஆனால் அவர்கள் நாங்கள் எதுவுமே செய்யவில்லை, இதற்கும் எங்களுக்கும் சமந்தம் இல்லை என சொல்லி விடுகின்றனர். பின் சக்தி தண்ணீர் குடித்துக் கொண்டே சாலையில் நடந்து வருகிறார். 

அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் அவரை அடித்து தூக்கி வீசுப்பட்டார்.  இதனால் அடிபட்டு அவர் பேச்சு மூச்சு இல்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். 

அவரை பார்த்து ஜனனி, நந்தினி, ரேணுகா எல்லோரும் கதறி அழுகின்றனர். பின் சக்தியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கின்றனர். இது தெரியாத குணசேகரன் அவர்களை தன் அம்மா, கதிர் முன்பு கேவலமாக பேசுகிறார். அவர்கள் எங்கே சென்று இருப்பார்கள் என எனக்கு தெரியும் என்றார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைந்தது உள்ளது. பரபரப்பாக இருக்கும் இந்த ப்ரோமோ மூலம் இன்றைய எபிசோட் என்னவாகும் என பார்க்கலாம்.

இவ்வளவு நாள் தன் அண்ணன் பேச்சு மட்டுமே கேட்டு அவர் பேச்சு மட்டுமே வேதவாக்கு என வாழ்ந்து வந்த தம்பி கதிர் தற்போது அண்ணன் ஆதி குணசேகரனுக்கு எதிராகவே மாறி இருப்பது சற்று வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் கடைசியாக கதிருக்கு எல்லாம் புரிந்துவிட்டதே, இனியாவது நல்ல மனிஷனாக இவர் வாழ வேண்டும். இவரை போல் இரண்டாவது அண்ணனும் மாறினால் ஆதி குணசேகரன் ஆட்டம் அடங்கிவிடும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்