Dancer Ramesh: ரமேஷை நான் கொன்றேனா? - அன்று நடந்தது இதுதான்!-முதல் மனைவி பேட்டி!
டான்ஸ் ரமேஷ் தற்கொலை செய்த நடந்தது என்பது குறித்து அவரது முதல் மனைவி பேசியுள்ளார்
சென்னை மூர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த டான்சர் ரமேஷ்க்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் இவரது முதல் மனைவியும், புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி. பார்க் அரசு குடியிருப்பு பகுதியில் இவரது இரண்டாவது மனைவியும் வசித்து வருகின்றனர். இரண்டு வீடுகளிலும் மாறி மாறி டான்சர் ரமேஷ் வசித்து வந்தார். இவர் டிக்டாக், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மைக்கேல் ஜாக்சன் ஸ்டைல் நடனம் மூலம் பிரபலமானார்.
ட்ரெண்டிங் செய்திகள்
ரமேஷ் சமூக வலைத்தளம் மட்டுமின்றி, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சமீபத்தில் வெளியான துணிவு படத்திலும் ரமேஷ் நடித்தார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.இந்த நிலையில்,கடந்த ஜனவரி 27 அன்று டான்சர் ரமேஷ் தனது பிறந்த நாளை கொண்டாட கே.பி. பார்க் அரசு குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டாவது மனைவி இன்பவள்ளி வீட்டிற்கு சென்றார். அப்போது நண்பர்களுக்கு விருந்து வைக்க, தனது 2ஆவது மனைவி இன்பவள்ளியிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
மனைவி பணம் தர மறுக்கவே, ரமேஷ் விரக்தியடைந்து யாரும் எதிர்பார்க்காத வேளையில், வீட்டின் 10வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் பலியானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ரமேஷின் மரணம் குறித்து இரண்டாவது மனைவி தரப்பில், ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், முதல் மனைவி சித்ரா, தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சந்தேக மரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரமேஷ் இறந்தது எப்படி என்பது குறித்து அவரது முதல் மனைவி indiaglitz சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்தப்பேட்டியில், “ எனக்கும் என் கணவருக்கும் இடையே பெரிதாக சண்டை வந்ததில்லை; ஒயின்ஷாப்புக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட அவர் என்னை அழைத்துக் கொண்டுதான் செல்வார்; என் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களிடம் வேண்டுமானால் கேட்டுக் கொள்ளுங்கள்.
ரமேஷின் முதல் மனைவி அவரது இறப்புக்கு நான் தான் காரணம் என்று சொல்லி இருக்கிறார்;அவர் அவ்வளவு நல்லவராக இருக்கும் பட்சத்தில் ரமேஷ் ஏன் என்னைத் தேடி வர வேண்டும். ரமேஷுக்கு உடம்பு சரியில்லை என்றாலும் கூட அவருக்கு நான் தான் சாப்பாடு ஊட்டி விடுவேன். எங்களுக்குள் பெரிதாக சண்டை வந்ததே கிடையாது; மீடியாக்கள் தான் இந்த விஷயத்தை அவர்கள் பிரபலமாக ஊதி பெரிதாக்குகிறார்கள்:
ஒருவேளை நாங்கள் தான் அவரை தள்ளி கொன்றோம் என்றால், பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லவா?
சம்பவம் நடந்த அன்றைய தினம் எப்போதும் போல பால் வாங்கி வந்து வீட்டில் உட்கார்ந்து இருந்தோம் அப்பொழுது அவர் தனக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று சொல்லி, என்னுடன் சண்டை போட்டார்; அந்த சண்டை ஒரு கட்டத்தில் முற்றியது. இதனையடுத்து மாடியில் இருந்து விழந்து விடுவேன் என்று மிரட்டினார். எப்போதும் போல்தான் மிரட்டுகிறார் என்று நான் நினைத்தேன், இதுபோல முன்பு கேஸ் சிலிண்டரில் இருந்து கேசை திறந்து விட்டு கூட ஒருமுறை மிரட்டினார்.தொடர்ந்து வேகமாக ஓடிய அவர் அங்கு பிடிக்க ஏதும் இல்லாத காரணத்தால் விழுந்து விட்டார் இதுதான் அங்கு நடந்தது. அவர் விழுந்தது போது அம்மா என்று சத்தம் கேட்டது” என்று அவர் பேசினார்.
டாபிக்ஸ்