Bombay Jayashri:சுயநினைவை இழந்த பாம்பே ஜெயஸ்ரீ?-குடும்பம் அதிகாரப்பூர்வ விளக்கம்
சரியான நேரத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சையானது கிடைக்கப்பெற்றது. தற்போது அவரது உடல்நிலையானது சீராக இருக்கிறது. அவர் நலம் பெற்று வருகிறார்.
லண்டனுக்கு இசைக்கச்சேரி நடத்த சென்ற பாம்பே ஜெய ஸ்ரீக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அது தொடர்பாக அவரது குடும்பம் அளித்துள்ள விளக்கத்தை இங்கு பார்க்கலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்
கெளதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘மின்னலே’ படத்தில் இடம் பெற்ற வசீகரா பாடலை பாடியதின் மூலம் அடையாளம் பிரபலமானவர் பாடகி ஜெயஸ்ரீ.
ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரது இசையமைப்பில் பல பாடல்களை பாடிய அவர் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பாடல்களை பாடி இருக்கிறார்.
குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் எகிடுதகிடு ஹிட் அடித்துள்ளன. அதே போல வெளிநாடுகளிலும் பல்வேறு கச்சேரிகளை பாம்பே ஜெய ஸ்ரீ நடத்தி வருகிறார்; இந்த நிலையில் அண்மையில் லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சிக்காக பாம்பே ஜெய ஸ்ரீ சென்றிருந்தார். அங்கு சென்ற அவர் aneurysm - ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Aneurysm (இரத்த நாளத்தில் ஏற்படும் சேதம் அல்லது இரத்த நாளத்தின் சுவர் பலவீனமடைவதால் தமனி சுவர் அல்லது இதய அறையில் வீக்கம் ஏற்படுவது)
இந்த நிலையில் ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்து குடும்பத்தினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த விளக்கத்தில், “சரியான நேரத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சையானது கிடைக்கப்பெற்றது.
தற்போது அவரது உடல்நிலையானது சீராக இருக்கிறது. அவர் நலம் பெற்று வருகிறார். அவருக்கு ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது;
பாம்பே ஜெய ஸ்ரீ குறித்து சமூகவலைதளங்களில் உலாவும் செய்திகளை நம்பவேண்டாம். அவரது உடல்நிலை குறித்த நிலவரத்தை நாங்களே உங்களுக்கு சொல்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பாம்பே ஜெய ஸ்ரீக்கு நேற்று இரவிலிருந்தே கடுமையான கழுத்து வலி இருந்ததாகவும், அவர் காலை மற்றும் மதிய உணவை எடுத்துக்கொள்ள வில்லை என்றும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து அவர் சுயநினைவை இழந்த நிலையில் அவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக தெரிகிறது.
டாபிக்ஸ்