தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan Ranganathan: ‘பாடி டிமாண்ட் அவர் என்ன ரேப்பா பண்ணார்; சிவகார்த்திகேயனை மட்டும் குற்றம் சொல்ல முடியாது-பயில்வான்

Bayilvan Ranganathan: ‘பாடி டிமாண்ட் அவர் என்ன ரேப்பா பண்ணார்; சிவகார்த்திகேயனை மட்டும் குற்றம் சொல்ல முடியாது-பயில்வான்

Kalyani Pandiyan S HT Tamil
Oct 18, 2023 09:30 AM IST

டி. இமான் சிவகார்த்திகேயன் இடையேயான பிரச்சினை குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கிறார்.

டி.இமான் பேட்டி!
டி.இமான் பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

டி இமான் இவ்வளவு நாள் கழித்து இது போன்ற ஒரு குற்றச்சாட்டை ஏன் வைத்தார் என்பது கொஞ்சம் புரியாத புதிராகத்தான் இருக்கிறது. அவருக்கு தற்போது மார்க்கெட் இல்லை என்பதால் அப்படி சொல்லி இருக்கிறாரா என்பது தெரியவில்லை. 

நானும் டி இமான் கொடுத்த பேட்டியை பார்த்தேன். அவர் அதில் சிவகார்த்திகேயனை மிகவும் கடுமையாக சாடி இருந்தார் குழந்தைகளின் நலன் கருதி சில விஷயங்களை தன்னால் சொல்ல முடியவில்லை என்றும்  குமுறி இருந்தார். 

நான் இந்த விஷயத்தில் உண்மையை அப்படியே போட்டு உடைத்து விட முடியும். ஆனால் எனக்கு வெளியே, நான் அடுத்தவர்கள் படுக்கையை எட்டிப் பார்க்கிறேன் என்ற ஒரு பெயர் இருக்கிறது அதனால் இந்த விஷயத்தை ஒரு உதாரணம் வழியே தெளிவுபடுத்துகிறேன். 

கமல், கௌதமி ஜோடியை உங்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். கமல், கெளதமி, கமலின் மகள் ஆகிய மூன்று பேரும் ஒரே பங்களாவில் தான் வசித்து வந்தார்கள். கௌதமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது கை கொடுத்தவர் கமல் தான். மீண்டும் கௌதமியை கதாநாயகியாக மாற்றியவரும் கமல் தான். 

இந்த நிலையில் திடீரென்று கௌதமி கமல்ஹாசனிடமிருந்து பிரிவதாகவும், தன்னுடைய மகளின் பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவை தான் எடுத்திருப்பதாகவும் பேசினார். அந்த விஷயத்தை அவர் அவ்வளவு கௌரவமாக வெளியில் சொன்னார். இதை பலர், பல்வேறு வகையாக பேசினார்கள். இந்த சம்பவத்தையும் டி. இமானின் சம்பவத்தையும் ஒன்றாக சேர்த்து பாருங்கள் உங்களுக்கு உண்மையானது புரியும்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் பிரபலங்கள் அமைதியாக இருப்பது வழக்கமான ஒன்றுதான். சிவகார்த்திகேயன் அதேபோன்று அமைதியாக இருந்தால் டி. இமானின் குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம். 

அப்படி இல்லாமல் சிவகார்த்திகேயன் இதற்கு பதில் கொடுத்தார் என்றால், இருவருக்கும் இடையிலான ரகசிய விஷயங்கள் அம்பலத்திற்கு வரும். சாணியை மிதித்து விட்டால் அதை கழுவி விட்டு அமைதியாக சென்றுவிட வேண்டும். நான் சாணியை மிதித்து விட்டேன் நான் சாணியை மதித்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது

சிவகார்த்திகேயனுடைய சினிமா கேரியரில் இது கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படங்களில் வெற்றியை பொறுத்து அமையும். 

இது சிவகார்த்திகேயன் குடும்பத்தில் கண்டிப்பாக பிரச்சனையை ஏற்படுத்தும். அந்த கருத்து மோதல்கள் வெளியே தெரியாமல் இருந்தால் நல்லது.  வெளியே தெரியும் பட்சத்தில் சிவகார்த்திகேயனின் இமேஜ் பாதிக்கப்படும்

சிவகார்த்திகேயனுக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும். எந்த விதமான கெட்ட பழக்கங்களும் இல்லை என்பதால் ஒருவர் அக்மார்க் தங்கம் என்று சொல்லி விட முடியாது. இது முழுக்க,முழுக்க உடல் ரீதியான தேவை சம்பந்தமான விஷயம். இதில் சிவகார்த்திகேயன் மீது மட்டும் குற்றம் சொல்ல முடியாது. சிவகார்த்திகேயன் என்ன பாலியல் அத்துமீறலிலா ஈடுபட்டார்” என்று பேசினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்