Hansika Motwani: திருமண வாழ்க்கையில் சிக்கலா? - நறுக் பதில் கொடுத்த ஹன்சிகா!
திருமணம் முடிந்து முதன்முறையாக சென்னை வந்த ஹன்சிகாவிற்கு விமானநிலையத்தில் ஏகபோக வரவேற்பு அளிக்கப்பட்டது
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 4 அன்று தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவை கரம் பிடித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இருவரும் இணைந்து கடந்த சில வருடங்களாக ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் பற்றிய தகவலை உறுதி செய்தார். இதனையடுத்து அவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் வைத்து நடைபெற்றது. தொடர்ந்து இருவரும் ஹனிமூனுக்காக ஆஸ்திரியா சென்றனர். இவர்களது திருமண வீடியோயை பிரபல ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் கைப்பற்றியது. இந்த நிலையில் திருமணம் முடிந்து சென்னை வந்த ஹன்சிகா விமானம் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ எல்லோருக்கு வணக்கம். அனைவருக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்; ஒரு குழந்தை மீண்டும் அவளது தாய் வீட்டிற்கு வந்தது போல உணர்கிறேன்; எனக்கு மாலை, ரோஜா பூக்கள் கொடுத்த அனைவருக்கும் என்னுடைய நன்றி. நந்த கோபால் சாரின் படத்தில் நடிக்கிறேன். இன்று அந்தப்படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. இந்த வருடத்தில் மட்டும் நான் 7 படங்களில் கமிட் ஆகியிருக்கிறேன். இந்த வருடம் எனக்கு உண்மையில் அதிஷ்டம் நிறைந்த ஆண்டாக இருக்கிறது. கல்யாண வாழ்கை ரொம்ப நல்லாயிருக்கு. சந்தோஷமாக அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
அப்போது திருமணம் முடிந்த பிறகு, பெண்களுக்கு சில சிக்கல்கள் நேருமே என்று கேட்ட போது, “ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இன்றைய தலைமுறை எல்லோரையும் சமமாக பார்க்கிறார்கள். இங்கு அனைவருமே சமமே.. நான் இன்று மீண்டும் ஷூட்டிங்கிற்கு வந்திருக்கிறேன். நீங்கள் என்னை வரவழைக்க வந்துள்ளீர்கள்.. இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும். திருமணத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஒரே மாற்றம் நான் அணிந்திருக்கும் மோதிரம்தான்; மற்றப்படி எல்லாமே ஒன்றுதான். ” என்று பேசினார்.
டாபிக்ஸ்