Trisha:‘உங்க தளபதி நல்லா இருக்காரு’ சுயம் வரம் எப்போது? - த்ரிஷா பேச்சு!
குந்தவைக்கு நீங்கள் கொடுத்த அன்பு என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது. ஒரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் போது அதில் நடித்த நடிகருக்கு நிச்சயம் சந்தோஷமாக இருக்கும். அதுக்குத்தான் இவ்வளவு போராடுகிறோம்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த படத்தின் முதல் பாகத்திற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்த காரணத்தால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பானது மக்களிடம் அதிகளவு மேலோங்கி காணப்படுகிறது. இந்த படமானது 2 மணி நேரம் 37 நிமிடங்கள் நீளம் கொண்ட படமாக இருக்கும் என தகவல்கள் சொல்லுகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் ( 16-04-2023) அன்று கோவையில் பொன்னியின் செல்வன் திரைப்படக்குழு புரோமோஷனுக்காக சென்றது.
நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா பேசும் போது, “ எல்லோரையும் சந்தித்ததில் மிகவும் சந்தோஷம். கோவைக்கு வந்து பல வருடங்கள் ஆகி விட்டன. மீண்டும் இங்கு வந்ததில் மகிழ்ச்சி” என்றனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்கள் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிப்பதை தெரிந்து கொண்டு லியோ லியோ.. என்று ஆர்ப்பரித்தனர்.
ஆனால் அதற்கு பதில் சொல்லாத த்ரிஷா, “குந்தவைக்கு நீங்கள் கொடுத்த அன்பு என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது. ஒரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் போது அதில் நடித்த நடிகருக்கு நிச்சயம் சந்தோஷமாக இருக்கும். அதுக்குத்தான் இவ்வளவு போராடுகிறோம். குந்தவை கதாபாத்திரத்தை வைரலாக்கியதற்கு மிகவும் நன்றி.” என்றார்.
தொடர்ந்து பேசிய த்ரிஷா, எங்கு சென்றாலும் லியோ பற்றி கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். கேட்டுக்கொண்டே இருக்கப்போகிறீர்கள். இப்போது சொல்கிறேன், “ நான் லியோ ஷூட்டிங்கில் இருந்துதான் வர்றேன். லோகேஷ் ப்ரோ மற்றும் உங்க தளபதி ரொம்பவே நல்லா இருக்காங்க..
தொடர்ந்து கல்யாணம் எப்போது என்று தொகுப்பாளர் கேட்க, “ என்னுடைய உயிர் மக்களுடையது. இப்போதைக்கு அப்படியே இருந்து விட்டு போகட்டும்” என்று சொன்னார்
டாபிக்ஸ்