தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhanush Speech: ‘பயமா இருக்கு; எண்ணத்தை படிப்புல வை’ வடசென்னை 2? - தனுஷ் தெறி!

Dhanush Speech: ‘பயமா இருக்கு; எண்ணத்தை படிப்புல வை’ வடசென்னை 2? - தனுஷ் தெறி!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 05, 2023 01:16 PM IST

ரசிகர்கள் எண்ணத்தை படிப்பில் வைக்க வேண்டும் என்று நடிகர் தனுஷ் அறிவுரை வழங்கி இருக்கிறார்

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் தனுஷ், “ லாக் டவுன் சமயத்துல தான் வெங்கி இந்த கதைய வந்து என்கிட்ட சொன்னாரு நான் அப்போ வேலை இல்லாம ரொம்ப மன உளைச்சல்ள இருந்தேன்.இந்தப்படத்தை எப்படியாவது மறுத்திடலாம் அப்படின்னுதான் நினைச்சேன்; ஆனா கதையை கேட்டதும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு; இந்த திரைப்படம் நிச்சயமா உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்.

மகன்களுடன் தனுஷ்
மகன்களுடன் தனுஷ்

ஏதோ புண்ணியம் பண்ணி இருக்கேன்னு நினைக்கிறேன். எனக்காக எங்கெங்கோ இருந்து இவ்ளோ பேர் வந்திருக்கீங்க. எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி.

வாத்தி படம் 1990களில் நடக்கிற கதை. இதுல வேடிக்கை என்ன அப்படின்னா ரியல் லைஃப்ல அப்ப நான் படிச்சிட்டு இருந்தேன். அப்போ டீச்சர்ஸ் வேலை ரொம்ப ஈஸின்னு நினைச்சேன். காரணம் டீச்சர் எல்லாம் எப்ப வேணாலும் வரலாம், எப்ப வேணாலும் போலாம். மாணவனா இருக்குற நம்ம தான் பெர்மிஷன் எல்லாம் கேக்கணும்னு நினைச்சிருக்கேன்.

ஆனா முதல்நாள் படபிடிப்பின் போது தான் டீச்சர் வேலை எவ்வளவு கஷ்டம் அப்படின்னு தெரிஞ்சது. டீச்சர் கைல தான் நம்ம தலையெழுத்து இருக்கு. ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போது டியூஷன் போனேன். படிக்கிறதுக்கு இல்ல.. என்னுடைய கேர்ள் ஃப்ரண்டை பாக்குறதுக்கு.. அப்போ என் வண்டியை வைத்து சத்தம் கொடுத்து என்னுடைய கேர்ள் ஃப்ரண்டுக்கு சிக்னல் கொடுப்பேன்; அதை பார்த்து என்னோட ஆசிரியர் ‘இவனல்லாம் எங்க உருப்பட போறான்’ அப்படின்னு சொல்லுவாரு

ஸ்கூல் படிக்கும்போது எப்படியும் பெற்றோர்கள் பள்ளி கட்டணம் கொடுத்துடுவாங்கன்னு ரொம்ப அலட்சியமா சுத்திருக்கேன். என்னோட பிள்ளைகளை படிக்க வைக்கும் போது தான் அதோட கஷ்டம் தெரியுது. 

படி படி படி 

எந்த சூழ்நிலையிலும் படிப்பு ரொம்ப ரொம்ப முக்கியம்; எண்ணம் போல் வாழ்க்கை உங்களுடைய எண்ணத்தை படிப்பில் வைங்க. அதுதான் உங்களை காப்பாத்தும்.

வடசென்னை அப்டேட் 

வடசென்னை அப்டேட் பற்றி கேக்குறீங்க, அதை வெற்றிமாறன் ஆபீஸ் முன்னாடி நின்னு போய் கேளுங்க.. எப்ப நடக்கும்ன்னு தெரியல. ஆனா கண்டிப்பா அது நடக்கும். என்னோட வண்டிக்கு பின்னால நீங்க பின் தொடர்ந்து வர்றீங்க

உங்க ஃப்ரண்டை உங்களை நம்பி அனுப்பி வைக்கிறாங்க.. அப்படி நீங்க என்ன செய்யும்போது எனக்கு ரொம்ப பயமா இருக்கு பொல்லாதவன் திரைப்படத்திலிருந்து எனக்கும் ஜீவிதமான நட்பு தொடர்ந்து வருது. ஜீவி இப்போது அவருடைய கோல்டன் ஃபார்ம்ல இருக்கார்” என்று பேசினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்