தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yogi Babu: பணத்தை தராம இழுத்தடிக்கிறார்.. யோகிபாபு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த தயாரிப்பாளர்! - நடந்தது என்ன?

Yogi Babu: பணத்தை தராம இழுத்தடிக்கிறார்.. யோகிபாபு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த தயாரிப்பாளர்! - நடந்தது என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Aug 21, 2023 11:13 AM IST

யோகிபாபு மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

யோகிபாபு புகார்!
யோகிபாபு புகார்!

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை விருகம்பாக்கத்தில் ROOBY ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் டேனியல். இந்த பேனரின் கீழ் படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்த இவர் டேனியல் அதில் யோகிபாபுவை நடிப்பதற்கு கேட்டு அதற்காக 60 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி,  இந்த பேச்சு வார்த்தையில் 20 லட்ச ரூபாய்க்கான காசோலையையும் முன் பணமாக கொடுத்ததாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கியதும் படத்தில் நடிக்க யோகிபாபுவை தயாரிப்பு நிறுவனம் அழைத்ததாகவும், ஆனாக் யோகிபாபு வரமால் ஏமாற்றி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் வேதனையடைந்த ஹாசிர் பணத்தை திருப்பிக்கேட்டு இருக்கிறார்.  ஆனால்  பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹாசிர் யோகிபாபு மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதற்கு யோகிபாபு தரப்பில் இருந்து அந்தத்தகவல் முற்றிலும் தவறானது என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்