Maamannan : அமைச்சர் உதயநிதிக்கு வந்த புது சிக்கல்.. மாமன்னன் படத்திற்கு தடை கேட்ட வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இதுவரை 13 கோடி வரை செலவிடப்பட்டு இருக்கிறது. உதயநிதியின் 8 நாள் கால்ஷீட் இன்னும் மீதம் இருக்கிறது. ஆனால் உதயநிதி படப்பிடிப்பிற்கு ஒத்துழைக்காமல் புறக்கணித்து வருகிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராமசரவணன் என்பவர் அண்மையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “ கே.எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் ‘ஏஞ்சல்’ என்ற திரைப்படம் தயாரிக்க முடிவானது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டே 80 சதவீதம் முடிவடைந்து விட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு மீதமியிருக்கும் நிலையில், இந்தப்படத்தை நிறைவு செய்யாமல் உதயநிதி மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அத்துடன் அதுவே தன்னுடைய கடைசிபடம் என்றும் தெரிவித்திருக்கிறார். ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி வரை செலவிடப்பட்டு இருக்கிறது. உதயநிதியின் 8 நாள் கால்ஷீட் இன்னும் மீதம் இருக்கிறது. ஆனால் உதயநிதி படப்பிடிப்பிற்கு ஒத்துழைக்காமல் புறக்கணித்து வருகிறார்.
ஆகவே அவர் மீதமுள்ள 'ஏஞ்சல்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து தரவேண்டும். இதுமட்டுமல்லாமல் நஷ்ட ஈடாக 25 கோடி தர உத்தரவிட வேண்டும். அதுவரை 'மாமன்னன்' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்த நிலையில் உதயநிதி மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இந்தப்படம் வருகிற ஜூன் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் நிலையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
டாபிக்ஸ்