Thalikku Thangam Scheme: ’தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது யார்?’ புள்ளி விவரத்துடன் விளாசிய பிடிஆர்!
”ஆட்சி மாறும் முன்னர் இருந்த அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக தங்கமும் வாங்காமல், நிதியும் தராமல் தாலிக்கு தங்கம் திட்டத்தை அதிமுக அரசே நிறுத்தி வைத்து இருந்தது”
மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், நேற்று முன் தினம் முதல் அதிமுக ஒரு விளம்பரத்தை வெளியிட்டு பச்சை பொய்யை சொல்லி வருகிறது, தாலிக்கு தங்கம் திட்டம் திமுக ஆட்சி வந்த பிறகுதான் நிறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டு கின்றனர்.
நான் சட்டமன்றத்தில் சொன்ன உண்மையை உங்களிடம் சொல்கிறேன். சட்டமன்றத்தில் தவறான தகவலையோ அல்லது பொய்யையோ சொன்னால் அந்த பொறுப்பில் இருந்தே நீக்க முடியும்.