Yashasvi Jaiswal: யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் சர்வதேச டி20 சதம் விளாசல்
Ind vs Nep Live: 49 பந்துகளில் சதம் விளாசி அதிரடி காண்பித்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்தியா-நேபாளம் இடையே நடைபெற்று வரும் ஆசிய கேம்ஸ் காலிறுதிச் சுற்றில் அதிரடியாக விளையாடிய இந்திய பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் சதம் விளாசினார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதுவரை ஆசிய கேம்ஸில் இதுவரை எந்தவொரு இந்திய வீரரும் 30 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை. இதன்மூலம், புதிய சாதனை படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சரியாக காலை 6.30 மணிக்கு ஹாங்ஜோவில் போட்டித் தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 3 சிக்ஸர்களை விளாசினார். ருதுராஜும் அவருக்கு தோள் கொடுத்து வருகிறார். ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினார். இது அவருக்கு முதல் டி20 சதம் ஆகும்.
ருதுராஜ் கெய்ஸ்வாட் 25 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களம் புகுந்த திலக் வர்மா 2 ரன்களில் நடையைக் கட்டினார். அதைத் தொடர்ந்து வந்த ஜிதேஷ் சர்மா 5 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழந்தார்.
சதம் விளாசிய ஜெய்ஸ்வாலும் ஆட்டமிழந்தார். திபேந்திர சிங் பந்துவீச்சில் கேட்ச் ஆனார் ஜெய்ஸ்வால். ரிங்கு சிங், ஷிவம் துபே அதிரடி காட்டினர்.
ரிங்கு சிங் 37 ரன்களும், ஷிவம் துபே 25 ரன்களும் விளாசினர். 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது.
நேபாளம் 120 பந்துகளில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடவுள்ளது.
டாபிக்ஸ்