Sachin Tendulkar: ‘ஆஸி., அணியின் இந்த முடிவை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்’-சச்சின் கருத்து
கோஹ்லி 12 ரன்களில் இருந்தபோது கைவிடப்பட்ட கேட்ச் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டம் நேற்று நடந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை மிட்செல் ஸ்டார்க் டக் அவுட்டாக்கினார். சில ஓவர்கள் கழித்து, ஹேசில்வுட், முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியை ஒரு ஷார்ட் பந்தில் டாப்-எட்ஜ் செய்ததால், சிறப்பாகப் கேட்ச் பிடிக்க ஒரு பொன்னான வாய்ப்பை உருவாக்கினார். ஆனால் மிட்செல் மார்ஷ் மற்றும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி இடையே தவறு நேர்ந்ததன் காரணமாக ஆஸ்திரேலியா அந்த வாய்ப்பை கைவிட்டது. கோலி பின்னர் 116 பந்தில் 85 ரன்கள் எடுத்தார். கே.எல். ராகுலுடன் இணைந்து 165 ரன்கள் எடுத்தார், ராகுல், ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தார், இந்தியா 200 ரன்களை 52 பந்துகள் மீதமிருக்க துரத்திப் பிடித்தது.
இதுகுறித்து 2011 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், "டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு அவர்களை 199 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. ஆஸ்திரேலியா நன்றாகத் தொடங்கியது, ஆனால் இந்த மேற்பரப்பில் அவர்கள் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளரைத் தவறவிட்டதாக நான் உணர்ந்தேன்," என்று அவர் கூறினார்.
"விராட் கோலி மற்றும் ராகுல் இடையேயான பார்ட்னர்ஷிப் எங்களுக்கு ஆட்டத்தை முத்திரை குத்தியது. அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தங்கள் நேரத்தை எடுத்து சில அற்புதமான ஷாட்களை இயக்க முடிந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பந்து நிச்சயமாக பேட்டில் சிறப்பாக வந்தது. இந்தியாவுக்கு வாழ்த்துக்கள் ஒரு நல்ல தொடக்கம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9