பாவத்தால் பார்வை இழந்த மன்னன்.. ஒரு கண்பார்வை தந்த கவுமாரியம்மன்.. முழு பார்வையும் தந்த கண்ணீஸ்வரமுடையார்
Kanneeswaramudayar: சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்றுதான் தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் கண்ணீஸ்வரமுடையார் எனவும் தாயார் அறம்வளர்த்த நாயகி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Kanneeswaramudayar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். உலகம் முழுவதும் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆதி காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபாடு கிடையாது. உலகம் எங்கிலும் லிங்க வடிவில் மிகப்பெரிய கலைக்கூடமாக சிவபெருமானின் கோயில்கள் விளங்கி வருகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு தங்கள் வாழ்க்கையில் அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ பக்தர்கள் இருந்து வருகின்றனர். வானை மட்டும் கோபுரங்களால் அலங்கரிக்கப்பட்ட எத்தனையோ கோவில்களில் சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் காட்சி கொடுத்து வருகின்றார். குறிப்பாக தமிழ்நாட்டில் மன்னர்கள் காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய கலையின் பொற்களஞ்சியமான கோயில்களை கட்டி அதில் சிவபெருமானை தெய்வமாக வைத்து வணங்கி வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்கள் எத்தனையோ நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன.